Sunday, July 3, 2011

சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது கொலை மிரட்டல் வழக்கு; கைது - விசாரணை


சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது
கொலை மிரட்டல் வழக்கு; கைது - விசாரணை



நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தயாரிப்பாளர் செல்வராஜ்,  தன்னிடம் 90 லட்சம் மோசடி செய்து விட்டார் என்று  சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ்

சக்சேனா மீது  புகார் செய்திருந்தார்.


மேலும் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். 


இதையடுத்து ஏமாற்றுதல், மோசடி, மிரட்டல், கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளில் சக்சேனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இதன் அடிப்படையில் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவிடம் கடந்த 2 நாட்களூக்கு முன்பு சிபிஐ விசாரணை

நடத்தியது.


இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார் சக்சேனா.   அப்போது விமான நிலையத்திலேயே  சக்சேனா கைது செய்யப்பட்டார்.


அசோக்நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சக்சேனாவிடம் விசாரணை நடைபெற்றது.


சைதாப்பேட்டை 9வது நீதிமன்ற நீதிபதி வீட்டில் சக்சேனா ஆஜர்படுத்தப்பட்டார்.

அரசு கேபிள் டி.வி. கழகத்துக்கு நிர்வாக இயக்குனர்


அரசு கேபிள் டி.வி. கழகத்துக்கு நிர்வாக இயக்குனர்

தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்ட அரசாணையில், தொழிலாளர் நலத்துறை கமிஷனர் ஹேமந்த்குமார் சின்ஹா, வணிகவரித்துறை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை கமிஷனராக இருந்த எஸ்.கிருஷ்ணன், நிதித்துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
நிதித்துறை இணை செயலாளர் ஆர்.கிர்லோஷ்குமார், வணிகவரித்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

பொதுத்துறை இணைச் செயலாளர் சி.சமயமூர்த்தி, வணிகவரித்துறை இணை கமிஷனராக (அமலாக்கம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


தொழிலாளர் மற்றும் நியமனத்துறை இணைச்செயலாளர் எம்.ஜெயராமன், அரசு கேபிள் டி.வி. கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், அரசு கேபிள் டி.வி. கழகத்தின் தலைவராக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டர் பலி


வாகன சோதனையின் போது சப்-இன்ஸ்பெக்டர் பலி

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது லாரி மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பள்ளிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 51). இவர் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை இவரும், 4 போலீசாரும் கிருஷ்ணகிரியில் உள்ள டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. எனவே சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அந்த காரின் நம்பரை குறிப்பதற்காக ரோட்டின் எதிர்புறம் திரும்பி நின்றார். அந்த வேளை அதிகாலை நேரம் என்பதால் அவர் நின்ற இடத்தில் வெளிச்சம் மிக குறைவாக இருந்தது.

 

அப்போது ஆந்திரா மாநிலம் சித்தூரில் இருந்து பெங்களூருக்கு கிரானைட் பாரம் ஏற்றி வந்த லாரி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மீது ஏறியது. இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்து அவருடன் பணியில் இருந்த சக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விபத்தை பார்த்து டிரைவர் லாரியை நிறுத்தினார். விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து தகவலறிந்த ஏராளமான போலீசார் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர்.


விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் ஆந்திரா மாநிலம் குப்பத்தை சேர்ந்த சிவப்பா (30) என்பவரை கைது செய்தனர். விபத்தில் இறந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


விபத்தில் பலியான சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு பிலோமினா என்ற மனைவியும் 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். மூத்த மகன் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியிலும், 2-வது மகன் ஆனந்த் மதுரை மருத்துவக் கல்லூரியிலும், 3-வது மகன் அருண் பி.எஸ்.சி. பட்டப்படிப்பும், மகள் அனுசுயா 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இலவச பஸ் பாஸ் :ஜெ. இன்று தொடங்கி வைக்கிறார்



இலவச பஸ் பாஸ் :ஜெ. இன்று தொடங்கி வைக்கிறார்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

 

அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கல்வி கிடைக்கும் வகையில் இலவச பஸ் பாஸ் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் தங்கள் வீட்டில் இருந்து பள்ளி சென்றுவருவதற்காக இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

இந்த பஸ் பாசை விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் மாணவ-மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

இலவ பஸ் பாஸ் திட்டத்திற்கும் ஆகும் செலவை தமிழக அரசு சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு வழங்கிவிடும்.

 

ஆண்டுதோறும் 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தினால் பயன்பெறுகிறார்கள். இதற்காக அரசு சுமார் ரூ.310 கோடி செலவு செய்கிறது.

இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.


மாணவர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்கள் படிக்கின்ற கல்வி நிறுவனத்திற்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் குறிப்பிட்ட நாளில் சென்று போட்டோ எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டோ எடுக்கும் நாளில் பள்ளிக்கு வராதவர்களுக்கு புதிதாக ஒரு நாள் ஒதுக்கி படம் எடுக்கும் வகையில் அதிகாரிகள் மாற்று ஏற்பாடும் செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். தற்போது அரசு விழாக்கள் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையாக நடைபெற்று வருவதுபோல் இந்த நிகழ்ச்சியும் எளிமையான முறையில் நடக்கும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கு 81 பேர் வரவில்லை


என்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கு 81 பேர் வரவில்லை


தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கவுன்சிலிங் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக பிளஸ்-2 படிப்பில் தொழில்கல்வி படித்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது.

நேற்று 691 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 81 பேர் வரவில்லை. வந்தும் 10 பேர் இடத்தை தேர்வு செய்யாமல் சென்றனர். இவர்கள் வேறு படிப்புக்கு சென்றிருக்கலாம்.

நேற்று 604 பேர் இடங்களை தேர்ந்து எடுத்தனர்.


இதுவரை நடந்த 3 நாள் தொழில்கல்வி கவுன்சிலிங்கில் 1,709 பேர் அழைக்கப்பட்டதில் 140 பேர் வரவில்லை. 1,559 பேர் கல்லூரிகளையும், பிரிவையும் தேர்ந்து எடுத்தனர்.


மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் 7-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் பொதுகவுன்சிலிங் தொடங்குகிறது.


 


 
 

 


 
 

 

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைபெய்யும்



தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று மழைபெய்யும்


தமிழ்நாட்டில் இப்போது தென்மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது.


ஆனால் போதிய அளவுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. அரபிக்கடலில் இருந்து வரக்கூடிய காற்றின் ஈரப்பதம் குறைவாக உள்ளது.
 
அதன்காரணமாக தமிழ்நாட்டில் வழக்கமான கோடை போய், மீண்டும் 2-வது கோடை காலம் வந்துவிட்டது போல கடந்த 10 நாட்களாக வெயில் வறுத்து எடுத்தது. பகலில் வெயில் அதிக கடுமையாகவும் இரவில் காற்று குறைவாகவும் இருந்தது.

இதனால் மின் விசிறிகூட அதிக வெப்பத்தைதான் கக்கின. அதன் காரணமாக நிம்மதியான தூக்கம் வராமல் சிரமப்பட்டனர்.

 

அதற்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக நேற்று முன்தினம் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களிலும் தமிழ்நாட்டில் வேறு சில இடங்களிலும் மழைபெய்தது.

நேற்று முன்தினம் திருவள்ளூரில் 5 செ.மீ.மழை பெய்துள்ளது. சென்னை விமானநிலையம், ஸ்ரீபெரும்புதூர், கடலூர், பரங்கிப்பேட்டை தலா 4 செ.மீ., செம்பரம்பாக்கம் 3 செ.மீ., நுங்கம்பாக்கம், தேன்கனிக்கோட்டை தலா 2 செ.மீ., காஞ்சீபுரம், திருத்தணி, பூண்டி தலா 1 செ.மீ.பெய்துள்ளது.

சென்னையில் நேற்று காலை சில பகுதிகளில் மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், திருவான்மியூர், அண்ணாநகர், வில்லிவாக்கம், அயனாவரம் உள்பட பல இடங்களில் மழை பெய்தது.

 

இன்றைய வானிலை குறித்து வானிலை அதிகாரி கூறுகையில், `தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழைபெய்யும். சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்ய வாய்ப்பு உள்ளது' என்றார்.

ஜெ. அதிரடி : விழாவுக்கு போனபோது பதவி பறிக்கப்பட்டது



ஜெ. அதிரடி :  விழாவுக்கு போனபோது பதவி பறிக்கப்பட்டது

அமைச்சராக இருந்த இசக்கிசுப்பையாவின் பதவி பூலித்தேவன் விழாவில் கலந்துகொண்டுவிட்டு கிளம்பியபோதுதான் பறிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி துவக்க விழா நேற்று மாலையில் நடந்தது. நெல்லையில் நெல்லையப்பர் தேரோட்ட விழாவையொட்டி நடக்கும் முக்கியமான அரசு விழாவாகும் இது.

இதில் பங்கேற்பதற்காக செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் நெல்லை வந்திருந்தார். நேற்று காலையில் சங்கரன்கோவிலில் அமைச்சர் கருப்பசாமி, அமைச்சர் சுப்பையா ஆகியோருடன் ஆய்வில் ஈடுபட்டார்.

பின்னர் மதியம் நெற்கட்டான்சேவலில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.


அந்த விழாவில் மூவரும் அமைச்சராக பங்கேற்றனர். சுப்பையா அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டு நெல்லையில் மாலையில் நடக்கும் அரசு பொருட்காட்சிவிழாவில் பங்கேற்க வருவதாக கூறிவிட்டு சென்றார்.


அவர் கிளம்பிய சிறிதுநேரத்திலேயே அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட செய்தி வெளியானது. சுப்பையாவிடம் பறிக்கப்பட்ட பதவி சற்று முன்னருடன் அவருடன் இருந்த அமைச்சர் செந்தமிழனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.


மாலையில் அரசு விழாவிற்கு வருவதாக கூறிவிட்டு சென்ற சுப்பையா, தமக்குஅரசு வழங்கியிருந்த காரையும், பாதுகாப்பு போலீசாரையும் மதியமே அனுப்பிவைத்தார்.


மாலை அரசு விழாவில் அவர் பங்கேற்கவில்லை.நெல்லை அரசு விழாவில் பங்கேற்ற செந்தமிழன், கருப்பசாமி ஆகியோர் பெயரளவுக்கு கூட புன்னகைக்குவில்லை.


விழாவும் அநியாயத்திற்கு அமைதியாக நடந்தது.  நெல்லைக்கு வந்த நேரத்தில் கூடுதல் பொறுப்பு கிடைத்ததற்காக மகிழ்வதா..மதியம் வரை உடன் இருந்து பார்த்த அமைச்சரை மாலையில் காணவில்லையே என வருத்தப்படுவதா என தெரியாமல் அமைச்சர் செந்தமிழன் டென்ஷனாகவே இருந்தார்.

குடிகார நாட்டில் இலவசங்கள் தேவையா? ராமதாஸ்




குடிகார நாட்டில் இலவசங்கள் தேவையா?  ராமதாஸ்

 தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பரந்தாமனின் மகள் ஒவியாவின் திருமணம் மதுராந்தகத்தை அடுத்த சோத்துபாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ், திருமணத்தை நடத்தி வைத்துப் பேசினார்.

 ’’தமிழநாடு என்று அழைப்பதை விட குடிகார நாடு என்று அழைக்கலாம். 1971 முதல் தமிழக ஆட்சியாளர்கள் 4,5 தலைமுறையினரை குடிகாரர்களாக்கிவிட்டார்கள். ஆட்சியாளர்களுக்கு யாருக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை. போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை வழங்குகிறார்கள்.

குடிகார நாட்டில் இலவசங்கள் தேவையா? சாராயக் கடைக்குப் போகும் சமுதாயம் முன்னேறாது. பூரண மதுவிலக்கை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக தலைமைச் செயலகத்தில் செயலாளர்கள் 40 பேர் உள்ளனர். இதில் 12 பேர் உயர் வகுப்பினர். ஒருவர் மட்டுமே வன்னியர் உள்ளார்’’ என்றார் அவர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி, கட்டண்ம் இல்லா கல்வி, தரமான கல்வியை அரசு வழங்க வேண்டும். உயர்தர மருத்துவ வசதி ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும். உணவுக்காக இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. மற்ற இலவசங்கள் தேவை இல்லாதது' என்றார்.

பாடப்புத்தகங்களில் போதைப் பொருள் கடத்த முயற்சி




பாடப்புத்தகங்களில் போதைப் பொருள் கடத்த முயற்சி


பாடப்புத்தகங்களில் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் என்ற போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.


இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத் துறை கமிஷனர் சஞ்சய்குமார் அகர்வால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:


சென்னை விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் சரக்குகளை சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 1 ந் தேதி வழக்கம் போல் சோதனையிட்டனர். அப்போது ஐதராபாத்தில் இருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பார்சல் ஒன்று காணப்பட்டது. அந்த பார்சலின் மேல் பாடப்புத்தகங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது. பாடப்புத்தகங்களை ஏன் அங்கு அனுப்ப வேண்டும்? என்று அந்த பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.


எனவே அந்த பார்சலை திறந்து புத்தகங்களை எடுத்துப் பார்த்தனர். மேலாக பார்க்கும்போது புத்தகம் போல் காணப்பட்டது. திறந்து பார்த்தபோது, அந்த புத்தகத்தின் நடுவே வெற்றிடத்தை உருவாக்கி அதற்குள் சிறிய பாக்கெட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பாக்கெட்டின் உள்ளே பவுடர் போன்ற பொருள் இருந்தது.


அதை பரிசோதனை செய்ததில் ஹெராயின் என்ற போதைப் பொருள் என்பது தெரிய வந்தது. அதன் எடை 500 கிராம். சர்வதேச சந்தையின் அதன் மதிப்பு ரூ.50 லட்சமாகும். இதை யார் அனுப்பியிருக்கக் கூடும் என்பது பற்றிய விசாரணையை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யானையை கொன்று தந்தங்கள் திருட்டு



யானையை கொன்று தந்தங்கள் திருட்டு


நீலகிரி வடக்கு வனக் கோட்டத்தில் ஒரு கும்பல் யானையை கொன்று தந்தங்களை திருடி சென்றுள்ளது.


நீலகிரி வடக்கு வனக்கோட்டத்துக்குட்பட்ட தெங்குமரஹாடா துலுக்கன் பட்டி என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது 12 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. அதன் தந்தங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருந்தன. இதனால் அந்த யானை தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.


யானையை கொன்று திருடப்பட்ட தந்தங்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கலாம் என தெரிகிறது. மேலும் யானை இறந்து கிடந்த இடத்தின் அருகே வேட்டை கும்பல் சமையல் செய்து சாப்பிட்டதற்கான அறிகுறிகள் இருந்தன. இந்த செயலில் ஈடுபட்டது கர்நாடகாவை சேர்ந்த கும்பலா? அல்லது தமிழ் நாட்டை சேர்ந்த கும்பலா? என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே தெங்குமரஹாடா வனப்பகுதியில் 2 யானைகள் இறந்து, அழுகிய நிலையில் கிடந்தன. இதில் ஒரு யானை ஆண் என்றும், அதன் தந்தங்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனிடையே மீண்டும் யானை வேட்டையாடப்பட்ட சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. .

காதல் திருமணத்தால் மோதல்: சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 7 பேர் கைது



காதல் திருமணத்தால் மோதல்: சப் இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 7 பேர் கைது

சென்னை சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் கருப்பையா. இவர் தேனாம்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் வசித்து வருபவர் ஏட்டு சுப்பிரமணி. கருப்பையாவின் மகனும், சுப்பிரமணியின் மகளும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்தாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதுபற்றி இருவரும் தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் கருப்பையா உள்பட அவரது தரப்பினர் 5 பேரையும், சுப்பிரமணி உள்பட அவரது தரப்பில் 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

ஆசைக்கு இணங்க மறுப்பு: மனைவியை கொலை செய்த கணவன் கைது





ஆசைக்கு இணங்க மறுப்பு: மனைவியை கொலை செய்த கணவன் கைது


சென்னை அண்ணாநகர் கிழக்கு, எல் பிளாக் 28 வது தெருவைச் சேர்ந்தவர் சக்தி (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மலர் (37). மலர் அங்குள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வீடுகளுக்கு மலர் வேலைக்கு செல்லவில்லை.


எனவே வீட்டு வேலைக்காக மலரைத் தேடி ஒருவர் மலரின் வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன்பு வந்தார். வீட்டுக் கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் அவர் சென்றார். அங்கு மலர் சுவரில் சாய்ந்திருந்த நிலையில் இறந்திருந்தார். அவரது முன்பு ஒரு தட்டில் சாப்பாடும், அதனருகில் எலி மருந்தும் இருந்தது.


எனவே அந்த நபர் அண்ணாநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கணவனிடம் விசாரணை நடத்திய போது, மனைவி எப்படி இறந்தார் என்பது தெரியாது என்று பதிலளித்தார். எனவே மலரின் மரணத்தை சந்தேகத்துக்கு இடமான சாவு என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


இந்த நிலையில் போலீசாருக்கு மலரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தது. அதில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. மலரின் தோழிகள் சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரின் கொடுமைகள் பற்றி அவர்களிடம் மலர் சொல்லியிருந்தது தெரிய வந்தது. எனவே கணவன் சக்தியை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து சக்தியை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது:


சம்பவத்தன்று காலையில் உறவுக்கு மலரை சக்தி அழைத்துள்ளார். ஆனால் அதற்கு மலர் மறுத்தார். இதனால் அவரை சக்தி அடித்து உதைத்துள்ளார். அடி தாங்காமல் மலர் மயங்கிச் சாய்ந்துவிட்டார். உடனே மலரின் மூக்கில் விரலை வைத்து பார்த்துள்ளார். மூச்சு நின்றுவிட்டது.


பின்னர் மலரை சுவரில் சாய்த்து வைத்து எலி மருந்தை மலரின் வாய்க்குள் சக்தி ஊற்றியிருக்கிறார். என்றாலும், சந்தேகம் தீராமல் கழுத்தை சக்தி நெரித்து இருக்கிறார். பின்னர் கதவை திறந்துபோட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மளிகைக்கடையில் இருந்த 10 பவுன் நகை திருட்டு



மளிகைக்கடையில் இருந்த 10 பவுன் நகை திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மேல் தங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(வயது44).இவர் வடமாண்டப்பட்டி கூட்டுரோடு பகுதியில் சிறிய மளிகைக்கடைவைத்து நடத்தி வருகிறார்.


இவர் தனக்கு சொந்தமான 10 பவுன் தங்கநகையை அடகு வைப்பதற்காக வீட்டில் இருந்து எடுத்து வந்து கடையில் வைத்து இருந்தார்.


கடந்த வியாழக்கிழமை கொண்டு வந்த நகையை வெள்ளிக்கிழமை அடகுவைக்காமல், சனிக்கிழமை வைத்துக்கொள்ளலாம் என்று கருதி கடையில் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.


வெள்ளிக்கிழமை காலை வந்து கடையை திறந்தபோது கடையின் மேல் கூரையில் ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் தங்கநகை வைக்கப்பட்டிருந்த இடத்தில் 10 பவுன் நகை இல்லாததையும் கடையில் இருந்த ரூ.8 ஆயிரம் ரொக்கப்பணம் காணாததையும் கண்டு திடுக்கிட்டார்.


மர்ம நபர்கள் கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி, இந்த கைவரிசையை நடத்தி உள்ளனர்.


இந்த திருட்டு குறித்து மத்தூர் போலீசில் ராமன் புகார்செய்தார். மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தயாநிதிமாறன் பதவி விலக வேண்டும்: கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கோரிக்கை



தயாநிதிமாறன் பதவி விலக வேண்டும்: கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கோரிக்கை

மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, அவர் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து அவர் பதவியில் இருந்து விலகினார். இப்போது தில்லி திகார் சிறையில் உள்ளார்.


இதே 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மீது இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


பதவியில் இருந்து கொண்டு விளக்கம் அளிப்பது பொருத்தமாக இருக்காது. உடனடியாக அவர் பதவி விலகி வழக்கைச் சந்திக்க வேண்டும் என்றார்.

இன்டர்நெட் மூலம் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்று கூறி ரூ.5 கோடி மோசடி: பெண் கைது




இன்டர்நெட் மூலம் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்று கூறி ரூ.5 கோடி மோசடி

பெங்களூர் கெங்கேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பாபுஷாப் பாளையாவை சேர்ந்தவர் உமாதேவி (வயது 40). இவருடைய கணவர் பலராம் இறந்து விட்டார். கடந்த 2007 ம் ஆண்டு வித்யாரண்யபுராவில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸ் கட்டிடத்தின் 3 வது மாடியில் எஸ்.எஸ்.எண்டர் பிரைசஸ் என்ற பெயரில் உமாதேவி ஒரு கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார்.


அப்போது இன்டர்நெட் மூலம் வீட்டில் இருந்தபடியே, வேலைக்கு எங்கும் செல்லாமல் எளிமான முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்றும், வேலை வாங்கி தருவதாக கூறியும் பத்திரிகை, இன்டர்நெட்டில் உமாதேவி விளம்பரம் செய்தார். இதையடுத்து உமாதேவியை சந்தித்து வேலை கிடைப்பது குறித்தும், எளிதில் பணம் சம்பாதிப்பது குறித்தும் கேட்டார்கள்.


இந்த வேலைகளில் சேர வேண்டும் என்றால் முன்பணமாக ரூ.12 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உமாதேவி நிபந்தனை விதித்தார். வேலை கிடைக்கும் என்ற ஆசையில் ஏராளமானவர்கள் உமாதேவியிடம் பணத்தை கொடுத்தனர். ஆனால் அவர் யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவும் இல்லை. வாங்கிய முன்பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்.


அவர் ரூ.5 கோடி வரை மோசடி செய்திருந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான உமாதேவியை தேடிவந்தனர். ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? என்பதே தெரியாமல் இருந்தது. இந்த மோசடி வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.


இதையடுத்து, உமாதேவியை பிடிக்க குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு ஊட்டியில் உமாதேவி தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் உமாதேவி, மற்றும் மோசடி சம்பவத்திற்கு உதவியாக இருந்த மோகன்குமார், உமேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 3 பேரையும் பெங்களூருக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


அப்போது வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் முன்பணம் வாங்கி பல கோடி மோசடி செய்ததை உமாதேவி ஒப்புக் கொண்டார். கைதான 3 பேரும் கொடுத்த தகவலின் பேரில் ஒரு விலை உயர்ந்த கார் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.

வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கைது



வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கைது

பெங்களூர் விவேக்நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஈஜிபுரா 5 வது கிராசில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டில் புகுந்து போலீசார் சோதனை நடத்தியதில், அங்கு விபசாரம் நடந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 5 புரோக்கர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


அதில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த அஞ்சுசிங்(வயது 55), முஸ்கான்ராய்(28), கிருஷ்ணா(27), தேவகன்ராய்(20), விவேக் நகரை சேர்ந்த ராகேஷ்(37) என்று தெரியவந்தது. மேலும் அந்த வீட்டில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பிரியா தத்தா(20), சீமா(35), சமீதா(21), தர்ஷாராய்(24), மாயா(18), ஜெசிகா(21), சுபா(26), அஞ்சலி காமி(21), ப்ரனித்தா(30) ஆகிய 9 பெண்களும் இருந்தனர்.


இந்த 9 பேரையும் கைதான புரோக்கர்கள் பெங்களூரில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறி மேற்கு வங்காளத்தில் இருந்து அழைத்து வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் பார்களில் நடனம் ஆட வைத்தும், வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தியும் வந்ததும் தெரியவந்தது.


இந்த இளம்பெண்களுடன் வாடிக்கையாளர்கள் உல்லாசமாக இருப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வாங்கி பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இதையடுத்து, அந்த பெண்கள் 9 பேரையும் அவர்களது சொந்த ஊருக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கைதான 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளி பேருந்து மோதி மாணவன் பலி




தனியார் பள்ளி பேருந்து மோதி மாணவன் பலி


மேட்டூர் மாதையன் குட்டையில் இருக்கும் எம்.ஏ.எம் மேல்நிலைப் பள்ளி என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது.


மேட்டூர் நகரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவிலேருக்கும் பள்ளியிலேருந்து மாணவர்களை தினமும் பள்ளியின் பேருந்துகள் கொண்டு வந்து மேட்டூரில் கொண்டுவந்து விட்டுவிட்டு செல்லும்.


நேற்று மலை, சம்பள்ளி இந்திரா நகரில் இருக்கும் தினகர் என்பவரின் மனைவி ஜமுனா அவர்களது ஆறு வயது மகன் தயாநிதிக்கு தடுப்பூசி போடுவதற்காக தனது ஸ்கூட்டி வண்டியின் பின்னல் உட்காறவைத்துக் கொண்டு குஞ்சாண்டியுரில் உள்ள மருத்துவரை பார்க்க சென்றுள்ளார்.


அப்போது, பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டுகொண்டு குஞ்சண்டியூரை நோக்கி வந்த எம்.ஏ.எம் மேல்நிலைப்பள்ளியின் பேருந்து, ஜமுனா சென்று கொண்டிருந்த மொபட்டை ஒட்டி சென்றுள்ளது. பேருந்துக்கு வழிவிட்டு இடது பக்க தார் சாலையை விட்டு கீழே இரங்கி நின்றுள்ளார் ஜமுனா.


வழக்கமான உயரத்தில் இருக்கும் பேருந்தின், படிக்கட்டுகளில் மாணவர்கள் இறங்கி, ஏற கொஞ்சம் சிரமமாக இருக்கும், மாணவர்கள் சிரமம் இல்லாமல் ஏறி, இறங்க வசதியாக படிக்கட்டுக்கு கீழே கொஞ்சம் வெளியே நீட்டியபடி கூடுதலாக ஒரு இரும்பு படிக்கட்டு தயார் செய்து அதை வழக்கமான படிக்கட்டுக்கு கீழே போருத்தியுள்ளர்கள் எம்.ஏ.எம் பள்ளி நிவாகத்தினர்.


குஞ்சாண்டியூர் செல்லும் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஜமுனாவின் ஸ்கூட்டி வண்டிக்கு பக்கத்தில் சென்ற பேருந்தின் படியின் கீழே, அரையடி நீளம் வெளியே நீட்டிய நிலையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு படிகாட்டு, நின்று கொண்டிருந்த ஜமுனாவின் ஸ்கூட்டி வண்டியில் மாட்டி வண்டியை கீழே இழுத்து தள்ளியது.


நிலை தடுமாறி சாய்ந்த ஜமுனா வலது பக்கம் விழுந்து விட்டார், ஆனால், குழந்தை தயாநிதி இடது பக்கம் பேருந்து சக்கரத்துக்குள் விழுந்து விட்டான், நினைத்துப்பார்க்கவே முடியாத இந்த கொடுரமான இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தயாநிதி இறந்துவிட்டான். பலமானம்க்காயயங்களுடன் ஜமுனா மருத்துவமனியில் உள்ளார்.


தயாநிதியின் மரணத்திற்கு யார் காரணம்...?
சட்டத்தை மதிக்காத, பொதுமக்கள் நலனில் அக்கறையில்லாத  பள்ளி நிர்வாகியா..?
பக்குவமில்லாத, பொறுப்பில்லாத பேருந்து ஓட்டுனரா...?
பஸ்சின் பாடிக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் வகையில் பொருத்தப்பட்ட படியுடன் இருக்கும் பேருந்தை சாலையில் ஓடுவதற்கு அனுமதி வழங்கிய மோட்டார் வாகன ஆய்வாளரா...?

Saturday, July 2, 2011

நடிகர் பிரபுதேவா விவாகரத்து வழக்கில் 7-ந் தேதி தீர்ப்பு


நடிகர் பிரபுதேவா விவாகரத்து வழக்கில் 7-ந் தேதி தீர்ப்பு

விவாகரத்து வழக்கில் நடிகர் பிரபுதேவாவும், அவரது மனைவி ரமலத்தும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் நேற்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.


நடிகரும், டைரக்டருமான பிரபுதேவா, குரூப் டான்சர் லதா என்ற ரமலத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் 1995-ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த ரமலத்தின் குடும்ப வாழ்க்கையில் நடிகை நயன்தாரா வடிவில் புயல் வீச ஆரம்பித்தது.


பிரபுதேவாவும், நயன்தாராவும் நெருங்கிப் பழகினர். பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்யும் மனநிலைக்கு வந்துவிட்டதால், பிரபுதேவாவும், ரமலத்தும் விவாகரத்து செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர்.

கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி பரஸ்பரம் பிரிந்து செல்வதற்கான மனுவை சென்னை முதன்மை குடும்பநல கோர்ட்டில் இருவரும் தாக்கல் செய்தனர்.
 
விவகாரத்து விதிமுறைப்படி, இருவருக்கும் 6 மாதம் காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை ஜுன் 30-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் இருவரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு கடந்த 30-ந் தேதி முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபுதேவா, ரமலத் இருவரும் கோர்ட்டுக்கு வரவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள்.
 
பிரபுதேவா வெளியூரில் இருப்பதால் கோர்ட்டுக்கு வரமுடியவில்லை என்றும், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் ரமலத் ஆஜராக முடியவில்லை என்றும் அவர்கள் காரணம் கூறினார்கள். அதைத் தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி ராஜா சொக்கலிங்கம் இந்த மாதம் (ஜுலை) 10-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.


இந்த சூழ்நிலையில், வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டியது இருப்பதால் வழக்கு விசாரணையை நேற்று (இன்று) எடுக்குமாறு நடிகர் பிரபுதேவா மனு தாக்கல் செய்தார். முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி ராஜா சொக்கலிங்கம் விடுமுறையில் இருந்ததால், பொறுப்பு நீதிபதியான முதலாவது கூடுதல் முதன்மை குடும்பநல கோர்ட்டு நீதிபதி பாண்டியன் மனுவை விசாரித்தார். இதைத்தொடர்ந்து, நடிகர் பிரபுதேவா பிற்பகல் 3 மணிக்கு கோர்ட்டில் ஆஜரானார். சிறிது நேரத்தில் அவரது மனைவி ரமலத்தும் ஆஜரானார். பின்னர் இருவரும் சாட்சியம் அளித்தனர்.

 

விவாகரத்து மனுவில் கூறப்பட்ட விவரங்களையும், பிரபுதேவா தனது குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்கு உதவும் வகையில் மனைவியிடம் ஒப்படைப்பதாக உறுதி அளித்திருந்த 3 வீடுகள் மற்றும் ரூ.10 லட்சம் டெபாசிட் தொடர்பான ஆவணங்களை நீதிபதி பாண்டியன் சரிபார்த்தார்.


பின்னர், மனு விவரங்கள் தொடர்பாக பிரபுதேவாவும், ரமலத்தும் வாக்குமூலம் அளித்தனர். இருவரும் ஒப்புதல் கையெழுத்திட்டனர். இந்த சட்ட நடைமுறைகள் முடிவடைவதற்கு 2 மணி நேரத்திற்கு மேல் ஆனது.

 

மாலை 5 மணிக்கு கோர்ட்டில் இருந்து பிரபுதேவாவும், ரமலத்தும் தனித்தனியே வெளியே வந்தனர். முன்னதாக, அவர்களின் வருகையையொட்டி கோர்ட்டு உள்ளேயும், வெளியேயும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். பிரபுதேவா தலைகுனிந்தபடியே கோர்ட்டைவிட்டு வெளியே வந்தார். வாசலில் தயாராக நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். இதேபோல் ரமலத் மற்றொரு வாசல் வழியாக வந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.

வண்டலூர் பூங்காவில் சிங்கம் 3 குட்டி போட்டது


வண்டலூர் பூங்காவில் சிங்கம் 3 குட்டி போட்டது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கம் அழகான 3 குட்டிகளை போட்டது. இது அந்த சிங்கத்திற்கு 3-வது பிரசவம் ஆகும். சிங்கமும், குட்டிகளும் தனி அறையில் வைத்து கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இவற்றை நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.

இந்த பூங்காவில் உள்ள லயன் சபாரியில் கவிதா என்ற 9 வயது பெண் சிங்கம் உள்ளது. கவிதா சிங்கம் கடந்த 2008-ம் ஆண்டில் 3 குட்டிகளையும், 2010-ம் ஆண்டில் 2 குட்டிகளையும் போட்டது. இதில் ஒரு குட்டி மட்டும் இறந்து விட்டது. மற்றவை நன்றாக உலவி வருகின்றன.

இந்நிலையில் லயன் சபாரியில் உள்ள ராகுல் என்ற ஆண் சிங்கத்துடன் கவிதா இணைந்ததால் மீண்டும் கர்ப்பம் தரித்தது. கடந்த 30-ந் தேதி அதிகாலை அது 3 அழகான குட்டிகளை ஈன்றது.

தற்போது புதிதாக பிறந்துள்ள இக்குட்டிகளையும் சேர்த்து பூங்காவில் 12 ஆண், 9 பெண் மற்றும் 3 குட்டிகள் என சிங்கங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

கவிதா சிங்கமும், புதிதாக பிறந்த குட்டிகளும் லயன் சபாரியில் உள்ள மற்ற சிங்கங்களால் இடைïறு ஏற்படாமல் இருக்க விலங்கு கூடத்தில் தனியறையில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. இந்த தனியறையைச் சுற்றி பாதுகாப்பிற்காக நிழல் வலைகள் கட்டப்பட்டு குகை போன்ற இருண்டான, பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.


மேலும் இவற்றின் நடவடிக்கைகளை கவனித்து தேவைப்படும் மருத்துவ வசதிகள் அளிக்க ஏற்றவாறு ஒரு கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமிரா மூலம் குட்டிகளை, தாய் சிங்கம் எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும் கண்காணிக்கிறார்கள்.


தற்போது குட்டி ஈன்றுள்ள பெண் சிங்கத்திற்கு 7 கிலோ மாட்டு இறைச்சியும், 150 கிராம் ஈரலும் கூடுதல் சிறப்பு உணவாக 2 கிலோ கோழி இறைச்சியும் தினமும் வழங்கப்படுகிறது.


இந்த தகவல்கள் பூங்கா இயக்குனர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நன்றி



ஜெயலலிதாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நன்றி


தமிழகத்தில் பொறியியல் கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.) பிறப்பித்த விதிமுறைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.


கடந்த 20 ஆண்டுகளாக, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, பிளஸ்-2-வில் 35 சதவீதம் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் என்று தமிழக அரசு நெறிமுறை வகுத்திருந்தது.
 
அதன் பின்னர், 2002-ம் ஆண்டு முதல், அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியரும் 35 சதவீதம் பெற்றிருந்தாலே போதும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் நெறிமுறை வகுத்திருந்தது.

ஆனால், 2011-12-ம் ஆண்டிற்கு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக, பொதுப் பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு 50 சதவீதமும், இடஒதுக்கீடு செய்யப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மாணவர்கள் 45 சதவீத மார்க் பெற்றிருக்க வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளை வகுத்துள்ளது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தற்போது பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு குறைந்தபட்ச தகுதியாக பட்டியல் இனத்தவர்(தாழ்த்தப்பட்டவர்கள்)/அருந்ததியர்/ மலைவாழ் பழங்குடியினர் ஆகிய வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் 35 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 40 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதமும், பொதுப் பிரிவினர் 50 சதவீத மார்க்கும் பெற்றிருக்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஆனால், ஏ.ஐ.சி.டி.இ. தற்போது வெளியிட்டுள்ள விதியின்படி பார்த்தால்,ஆதி திராவிடர்/அருந்ததியர்/ பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களும் பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதியாக 45 சதவீதம் மார்க் பெற்றிருக்க வேண்டும்.

 

இந்த புதிய விதிமுறை, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு பாதகமாக அமையும். எனவே முதல்-அமைச்சர் ஜெயலலிதா 14.6.11 அன்று டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது இதுசம்பந்தமான கோரிக்கை மனுவை அளித்தார். அதில், பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு தமிழ்நாடு அரசு வகுத்துள்ள தற்போதைய விதிகளே பின்பற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.


ஆனால் இதுகுறித்து மத்திய அரசு மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. எந்த முடிவும் உடனடியாக எடுக்கவில்லை. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உடனடியாக துவங்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதன் பேரில், தமிழக அரசு 29.6.11 அன்று சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

 

இந்த மனுவின் மீது இறுதித் தீர்ப்பு வரும் வரையில், ஏற்கனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண் தகுதிக்கான விதிமுறைகளையே பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. விதிகளுக்கு தடை வழங்கும்படியும் தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டது.


இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஏ.ஐ.சி.டி.இ.யின் விதிகளுக்கு இடைக்கால தடை விதித்தும், தமிழ்நாட்டில் ஏற்கனவே குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியை பின்பற்றப்படுவதற்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவின் மூலம் ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் நலன் காக்கப்பட்டு, சமூகநீதி நிலைநாட்டப்பட்டது.


ஏழை, எளியவர்களின் பொறியியல் கல்வி கனவு நனவாவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவ-மாணவியர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்து வருகிறார்கள்.

ஜெயலலிதாவிற்கு திமுக இளைஞர் அணி கண்டனம்


ஜெயலலிதாவிற்கு திமுக இளைஞர் அணி கண்டனம்

தி.மு.க., அரசால் கொண்டு வரப்பட்ட, சமச்சீர் கல்வியை அமல்படுத்தத் தவறிய ஜெயலலிதாவிற்கு, தி.மு.க., இளைஞர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.

தி.மு.க., இளைஞர் அணி, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டம், சென்னையில் நடந்தது. இளைஞர் அணிச் செயலர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், தி.மு.க., அரசால் கொண்டு வரப்பட்ட, நலத்திட்டங்களில் ஒன்றான சமச்சீர் கல்வியை அமல்படுத்தத் தவறிய, ஜெயலலிதாவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சமச்சீர் கல்வியை தடை செய்வதன் மூலம், மாணவர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவதையும், 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள் வீணடிக்கப்படுவதை சுட்டிக்காட்டவும், கட்சியில் உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானங்களை விளக்கவும்,
 
தமிழகம் முழுவதும் வட்டங்கள்தோறும், தெரு முனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது, புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல், போலியான காரணங்களைக் கூறி, சட்டசபை செயலகத்தை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றிய, அ.தி.மு.க., அரசை கண்டிப்பது, என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

நாளை நடிகர் கார்த்தி திருமணம் : இந்திரலோக மாடலில் அரங்கம்


நாளை நடிகர் கார்த்தி திருமணம் :
இந்திரலோக மாடலில் அரங்கம்
 
நடிகர் கார்த்தி திருமணம் கோவையில் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. திருமணத்தில் கலந்து கொள்ள நடிகர்- நடிகைகள், உறவினர்கள் கோவையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


  நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி-ரஞ்சனி திருமணம் கோவை கொடிசியா ஹாலில் நாளை அதிகாலை 5-45 மணிக்கு நடைபெறுகிறது.
 
திருமணம் நடைபெறும் கொடிசியா அரங்கம் இந்திரலோக மாடலில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.   நடிகர் சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் நேற்று முன்தினம் கோவைக்கு வந்து விட்டனர்.

சிவகுமாரின் சொந்த வீடு கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள காசிகவுண்டன்புதூரில் உள்ளது. சிவகுமார் உள்பட அனைவரும் நேற்று மதியம் 12 மணி அளவில் காசிகவுண்டன்புதூர் வந்தனர்.
 
அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கியது. முதலில் வீட்டில் சாமி கும்பிட்டனர். பின்னர் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
 
இதில் சிவகுமாரின் உறவினர்கள், ஊர்க்காரர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.   விநாயகரை தரிசித்ததும் கார்த்தி உள்பட அனைவரும் திருமணம் நடைபெறும் கொடிசியா அரங்கத்துக்கு கிளம்பி வந்தனர்.
 
திருமணத்தில் உறவினர்கள், நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
 

 

வீரபாண்டி ஆறுமுகம் மீது அவதூறு வழக்கு தொடருவேன்: அ.தி.மு.க. வக்கீல்



வீரபாண்டி ஆறுமுகம் மீது அவதூறு வழக்கு
தொடருவேன்: அ.தி.மு.க. வக்கீல்

சேலம் அருகே உள்ள நிலவராப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். அ.தி.மு.க. வக்கீல்.   இவர்,   தவறாக பேசி வருவதாக சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம், மணிகண்டனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் வக்கீல் மணிகண்டன்,   ‘’6 பேர் கொலை செய்யப்பட்டதை விசாரிக்க ஆரம்பத்தில் இருந்தே நான் தெரிவித்து வருகிறேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் வந்தது. நான் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வெளியில் செல்லும்போது பின்னால் வந்து மிரட்டி சென்றனர்.

செல்போனிலும், போனிலும் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதை எல்லாம் பொறுத்து கொண்டு இருந்து வந்தேன்.

அமைச்சராக இருந்தபோது வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய சிறைக்கு மாநகராட்சி காரில் சென்று பாரப்பட்டி சுரேஷ்குமாரை பார்த்து வந்தார்.


இதை நான்தான் வெளி உலகிற்கு கொண்டு வந்தேன். இதனால் அவர்கள் கோபம் அடைந்தனர். தேர்தல் நேரத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேட்டி தரும்போது அ.தி.மு.க. பொது செயலாளரை சரமாரி திட்டினார். ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இதற்கு நான் விளக்கம் கேட்டேன்.


இது தவிர தேர்தல் நேரத்தில் சேலம் அங்கம்மாள் காலனி பகுதி மக்கள் பிரச்சினை பற்றி சி.டி. தயார் செய்து அதை வெளியிட்டேன். இதனால் அமைச்சர் கோபம் அடைந்தார். தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.


இதன் பின்னர் நான் 6 பேர் கொலை குறித்து விசாரிக்க தமிழக டி.ஜி.பியை சந்தித்து மனு கொடுத்தேன். இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார் ஆகியோர் எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


எனக்கு மிரட்டல் விடுத்தபோது அந்த பேச்சை பதிவு செய்துள்ளேன். இதையும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அ.தி.மு.க. பொது செயலாளரை திட்டியதற்கான ஆதாரத்தையும் வைத்து கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது அவதூறு வழக்கு தொடர உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜவ்வாது மலையில் கோடைவிழா


ஜவ்வாது மலையில் கோடைவிழா
 
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் கோடை விழா இன்று தொடங்கியது. வனத்துறை அரசு மேல்நி லைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் கோடை விழாவை உணவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி தொடங்கி வைத்தார். கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமை தாங்கினார்.
 
நாளை வரை இவ்விழா நடக்கிறது. இதில் அரசு பல்துறை பணிவிளக்க கண்காட்சியும் நடக்கிறது. அரசின் ஒவ்வொரு துறை சார்பிலும் அரங்கங்கள் வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியை வனத்துறை அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார்.
 
அரசு நலத்திட்ட உதவிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் புத்திசந்திரன் வழங்கினார். கோடை விழாவில் காய்கறி, மலர்களால் அலங்காரம் செய்யப் பட்ட வரவேற்பு வளைவுகள் அமைக்கப் பட்டிருந்தது. வனத்துறை, தோட்டகலைத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை, சமூகநலம் ஆகிய துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
 
விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரசித்தனர். இதில் சுற்றுலா அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வெள்ளையன், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்குமார், ஜெயசுதா, சுப்பிரமணியன், அரங்கநாதன், பாபு முருகவேல் போலீஸ் சூப்பிரண்டு சாமுண் டீஸ்வரி, வேலூர் மண்டல வனபாதுகாவலர் வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள்


பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள்
 
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் கே.பிரியாவிடம் நிலத்தடி நீர் பாதிப்பால் பயிர் பால் பிடிக்காமல் கருகிவிட்டது.
 
நெல், கரும்பு, மணிலா கருகி மகசூல் இழப்பு ஏற்பட்டு உள்ளது.ஆகையால் காப்பீடு செய்த விவசாயிகள் நலன் கருதி சாகுபடி அடங்களில் எழுதி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
 
தொடர்ந்து தாலுகா அலுவகம் முன்பு பாதிக்கபட்ட நெல் பயிரை வைத்து அதற்கு மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

 

 

 

 

 

 

 

 

திருநெல்வேலி: அரசு பொருட்காட்சி தொடக்கம்


திருநெல்வேலி: அரசு பொருட்காட்சி  தொடக்கம்

திருநெல்வேலியில் அரசு பொருட்காட்சி நாளை தொடங்குகிறது.


தமிழக செய்தித்துறை அமைச்சர் ஞா. செந்தமிழன் பொருட்காட்சியை தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில், அமைச்சர்கள் சொ. கருப்பசாமி, இ. சுப்பையா, நடிகர் சரத்குமார் எம்எல்ஏ உட்பட பல எம்.பி., எம்எல்ஏ.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.


திருநெல்வேலி மாநகராட்சி பொருட்காட்சித் திடலில் உள்ள அண்ணா கலையரங்கில், மாலை 5 மணியளவில் இதற்கான தொடக்க விழா நடைபெறுகிறது. 


தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதினால் எந்த பயனும் இல்லை: திருமாவளவன்



மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதினால் எந்த பயனும் இல்லை: திருமாவளவன்

டீசல் விலை உயர்வை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்,


கடந்த ஓராண்டில் மட்டும் மத்திய அரசு 10 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது. சராசரியாக மாதத்திற்கு ஒருமுறை என்ற அளவில் இந்த விலையை உயர்த்தினார்கள். ஏழை எளிய மக்களை இது கடுமையாக பாதித்துள்ளது.
 
சமையல் கியாஸ் ரூ.50, டீசல் ரூ.3 மண்எண்ணை ரூ.2 என சமீபத்தில் விலையை உயர்த்தி உள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்த்திருப்பதாக மத்திய அரசு காரணம் காட்டி இருக்கிறது. இதனால் இந்த விலை உயர்வை வாபஸ் பெற இயலாது என்றும், மாநில அரசு விற்பனை வரியை குறைத்து கொள்ளலாம் என்றும் யோசனை கூறியுள்ளது.
 
 மத்திய அரசின் இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்ததான் அரசு தேவைப்படுகிறது. எனவே இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். ஊழல் ஒழிப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு வந்துள்ளது. ஊழல்  வறுமையை லோக்பால் அமைப்பால் மட்டுமே ஒழிக்க முடியாது. அடிப்படையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
 
புரட்சிகரமான சமச்சீர் கல்வி திட்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக கூறி இந்த அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதுபற்றி ஆராய வல்லுனர் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. ஆனால் அந்த குழுவில் சிறந்த கல்வியாளர்கள் இடம் பெறவில்லை. எனவே சிறந்த கல்வியாளரை நியமித்து இந்த ஆண்டு முதலே சமச்சீர் கல்வி திட்டத்தில் காலம் தாழ்த்தாமல் பெருந்தன்மையுடன் தொடர வேண்டும்.
 
இலவச திட்டங்கள் என்ற பெயரில் லேப் டாப், ஆடு, மாடு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த திட்டங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும். லேப்டாப் கொடுப்பதினால் எந்த பயனும் இல்லை. இலவச லேப் டாப்பிற்கு இன்டர்நெட் இணைப்பு கொடுக்க வேண்டும். அதற்கு நிறைய செலவாகும். இதனால் இதுபோன்ற திட்டத்தை கைவிட வேண்டும். இதற்கு பதிலாக கல்வியை மட்டும் இலவசமாக வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடவேண்டும். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வேறு பணியில் அமர்த்த வேண்டும் என்றார்.

அண்ணனை கொன்ற தம்பி படுகொலை



அண்ணனை கொன்ற தம்பி படுகொலை
 
நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன்கள் சிங்காரவேலு (வயது 30), ஞானவேல் (28), மகள் மங்கையர்க்கரசி (16). கடந்த 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது நாராணயசாமி தனது மனைவியுடன் இறந்தார். இதற்காக அரசு சார்பில் சுனாமி நிதியாக ரூ. 5 லட்சம் மங்கையர்க்கரசி பெயரில் வழங்கப்பட்டது.
 
இந்த நிதியை ஞானவேல் பெற்றுக்கொண்டார். 2006 ம் ஆண்டு முதல் மங்கையர்க்கரசியை ஞானவேல் வளர்த்து பள்ளியில் படிக்க வைத்தார்.   இந்த ஆண்டு மங்கையர்க்கரசி 10 ம் வகுப்பு முடித்து உள்ளார். அவர் அண்ணன் ஞானவேலிடம் நான் மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஞானவேல் மேற்கொண்டு படிக்க வேண்டாம். உன்னை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு உள்ளேன் என்றார். ஆனால் இதற்கு மங்கையர்க்கரசி சம்மதிக்காமல் தனது மூத்த அண்ணன் சிங்கார வேலுவிடம் தெரிவித்தார். இவர் நேராக ஞானவேல் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரிடம் மங்கையர்க்கரசியை படிக்க வை. இல்லை என்றால் சுனாமி நிதி பணத்தை என்னிடம் தந்து விடு.
 
நான் அவளை படிக்க வைத்து திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.   2 பேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ஆத்திரம் அடைந்த ஞானவேல் கத்தியை எடுத்து சிங்காரவேலுவை சரமாரியாக குத்தினார்.
 
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிங்காரவேலுவை அக்கம் பக்கத்தினர் தூக்கி கொண்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். ஆத்திரத்தில் அண்ணனை கொன்றுவிட்டோமே என வேதனை அடைந்த ஞானவேல் நாகை அரசு ஆஸ்பத்திரி நோக்கி ஓடினார். அங்கு கொலை செய்யப்பட்ட சிங்காரவேலுவின் மனைவி வழி உறவினர்கள் குமார், ரவிச்சந்திரன், ஆனந்தராஜ் ஆகியோர் வந்தனர். 3 பேரும் ஞானவேலை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தினர்.
 
இதில் ஞானவேல் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இதனால் நாகையில் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதுகுறித்து நாகை போலீசார் வழக்குபதிவு செய்து குமார், ஆனந்தராஜ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ரவிச்சந்திரனை போலீசார் தேடி வருகிறார்கள்.   ஓரே வீட்டில் 2 பேர் கொலை செய்யப்பட்டதால் அவர்களது உறவினர்கள் வீட்டு முன்பு திரண்டனர்.

Friday, July 1, 2011

மினி பஸ் மோதி பணியில் இருந்த டிராபிக் போலீஸ் பலி



மினி பஸ் மோதி பணியில் இருந்த டிராபிக் போலீஸ் பலி

திருச்செங்கோட்டில் மினி பஸ் மோதி பணியில் இருந்த டிராபிக் போலீசார் பலியானார்.


திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் போக்குவரத்து பரிவில் ஏட்டாக பணிபுரிந்துவருபவர் செல்வராஜ்(42). இவர் திருச்செங்கோடு பரமத்தி வேலூர் பிரிவில் சிக்னலை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த திருச்செங்கோடு கூட்டப்பள்ளி செல்லும் மினி பஸ் ஒன்று பிரேக் பிடிக்காமல் டிராபிக் போலீஸ் மீது மோதியது. இவ்விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விரைவில் வீரத்தைக் காட்டுவோம்: துரைமுருகன்



விரைவில் வீரத்தைக் காட்டுவோம்: துரைமுருகன்
 

 திமுக துணை பொதுச்செயலர் துரைமுருகன் அரக்கோணத்தில்  நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் 88-வது பிறந்த நாள் விழா பட்டிமன்றத்தைத் தொடங்கி வைத்து அவர் பேசினார்.

  அவர்,   ‘’இலங்கை தமிழர் பிரச்னைக்காக தனது ஆட்சியையே தூக்கி எறிந்தவர் அவர். பிரபாகரனை தூக்கில் போட வேண்டும், போர் என்றால் அங்கு மக்கள் சாகத்தான் வேண்டும் என்றெல்லாம் சொன்னவர் ஜெயலலிதா. இன்று இதையெல்லாம் மறந்து விட்டு தமிழர்களை ஏமாற்றி வருகிறார்.

 சூரியன் அஸ்தமித்து விட்டதாக ஜெயலலிதா கூறினார். சூரியனுக்கு அஸ்தமனம் என்பதே கிடையாது. பூமியின் சுழற்சியில் அது பார்வையில் இருந்து மறைகிறது அவ்வளவுதான். அது மறுபடியும் உதயமாகும்.

 சட்டப் பேரவையில் விரைவில் எங்கள் வீரத்தை காட்டுவோம்’’ என்று பேசினார்.





 

மதுரை மேயர் தேன்மொழி கோர்ட்டில் சரண்

 

மதுரை மேயர் தேன்மொழி கோர்ட்டில் சரண்

 
மதுரை மேயர் தேன்மொழி மதிச்சியத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய உடந்தையாக இருந்ததாக வக்கீல் ஜெயராம் என்பவர் மாவட்ட கோர்ட்டில் புகார் செய்தார். இடம் ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக விசாரணை நடந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
 
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு மேயர் தேன்மொழி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
 
இதனை தொடர்ந்து மதுரை மேயர் தேன்மொழிக்கு மதுரை ஐகோர்ட் கிளை முன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில்  மதுரை இரண்டாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் சரண் அடைந்தார்.

வேன், பஸ் மீது ரயில் மோதல்: 4 பேர் பலி



வேன், பஸ் மீது ரயில் மோதல்: 4 பேர் பலி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வெள்ளிக்கிழமை வேன், பஸ் மீது சரக்கு ரயில்மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயம் அடைந்தனர்.


சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் ஊஞ்சக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செட்டிமுத்து மகன் பூபதி (30). தறித் தொழில் செய்து வந்த இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு புதிதாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார்.

 இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நண்பகலில் வைகுந்தம் அக்ரஹாரம் தாழையூரைச்சேர்ந்த எம்.மாது (40), சரவணன் (32), பி.மணி (40), எம்.ரவி (30), என்.நாகராஜ்(28), பி.பூபதி (20) ஆகியோரை ஏற்றிக் கொண்டு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றார்.


வைகுந்தத்தை அடுத்த மேட்டுக்காடு பகுதியில் சென்றபோது ஈரோடு-சேலம் ரயில்பாதையில் ரயில் வருவதற்காக நண்பகல் 12.15 மணியளவில் கேட் போடப்பட்டிருந்தது.

கேட் கீப்பர் சுரேஷ் (34) இரும்புக் கதவைப் போட்டுவிட்டு ரயிலுக்காககாத்திருந்தார். அந்த வழியாகச் சென்ற பூபதியின் கார், ரயில் செல்வதற்காக கதவையொட்டி நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.


அதே சமயம் வைகுந்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் மினி பஸ் ஒன்று ரயில்வே
கேட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.
 
இந்த பஸ்ஸில் சங்ககிரி ஆவரங்கம்பாளையத்தைச் சேர்ந்த ஆர்.பழனிவேலு (45), கொங்கணாபுரம் கோரணம்பட்டியைச்சேர்ந்த ஆர்.செல்வம் (40), கொங்கணாபுரம் ரங்கம்பாளையம் பிரிவைச் சேர்ந்த
என்.நாகராஜ் (40), மாவேலிபாளையத்தைச் சேர்ந்த கே.நடேசன் (60) ஆகியோர் இருந்தனர். பள்ளி பஸ் டிரைவர்களான இவர்கள், இந்த வழியாக ஓட்டுநர் பயிற்சிமேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.



 ரயில்வே கேட் பகுதியில் வேகமாக வந்த பள்ளி பஸ், எதிர்பாராதவிதமாக முன்னால்நின்று கொண்டிருந்த வேனின் பின் பகுதியில் மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறியவேன், கேட்டை உடைத்துக் கொண்டு தண்டவாளத்தில் நுழைந்தது. அப்போது ஈரோட்டில்இருந்து குஜராத் மாநிலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனங்களை எடுத்துச்செல்லும் சரக்கு ரயில், வேன் மீதும் அதைத் தொடர்ந்து வந்த பள்ளி பஸ் மீதும்பயங்கரமாக மோதியது.


இந்த விபத்தில் பஸ் சுக்குநூறாக நொறுங்கியது. ஆம்னி வேனும் தூக்கி வீசப்பட்டது. இதில் பள்ளி பஸ்ஸை ஓட்டி வந்த பழனிவேலு, செல்வம், ரங்கம்பாளையம் என்.நாகராஜ்,வேனை ஓட்டி வந்த பூபதி ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தனர்.


 ரயில் டிரைவர்கள் கேரளாவைச் சேர்ந்த அரவிந்த் (57), பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இருவாகனங்களிலும் பயணித்த 9 பேர் காயம் அடைந்தனர். இவர் சங்ககிரி அரசுமருத்துவமனையிலும் ஈரோடு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


 இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஈரோட்டில் இருந்து மீட்பு ரயில் விரைந்து வந்தது.காயம்பட்டவர்களுக்கு அதன் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம், ரயில்வே கோட்ட மேலாளர் பி.என்.ராம்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், சங்ககிரி கோட்டாட்சியர் பழனிசாமி,ரயில்வே டி.எஸ்.பி. ராஜவேல் உள்ளிட்டோர் விரைந்து வந்து மீட்புப் பணிகளைபார்வையிட்டு துரிதப்படுத்தினர் .   இந்த விபத்து வைகுந்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் வடிவேல் மீதான வழக்கு தள்ளிவைப்பு



நடிகர் வடிவேல் மீதான வழக்கு தள்ளிவைப்பு

நடிகர் வடிவேல் மீதான அடிதடி வழக்கின் இறுதி விசாரணையை சென்னை ஐகோர்ட்டு தள்ளி வைத்துள்ளது.


சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் வக்கீல் முத்துராம். இவர், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மைத்துனர். இவர் 12.9.07 அன்று மரணமடைந்தார். எனவே இறுதி அஞ்சலிக்காக பலர் அவரது வீட்டுக்கு வந்திருந்தனர். அங்கு அதிக கூட்டமாக இருந்ததால், அதே பகுதியில் வசித்து வந்த நகைச்சுவை நடிகர் வடிவேல் தனது அலுவலகத்துக்கு செல்வதில் இடைழூறு ஏற்பட்டது.


இதனால் வடிவேலுவுக்கும், இறுதி அஞ்சலிக்கு வந்த சிலருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் வடிவேல் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மீண்டும் வடிவேல் 20 பேரை அழைத்து வந்து விஜயகாந்தின் மேலாளர் சதீஷ்குமாருடன் தகராறு செய்ததாகத் தெரிகிறது. அப்போது சதீஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டது.


இதுசம்பந்தமாக விருகம்பாக்கம் போலீசில் சதீஷ்குமார் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வடிவேல் உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பதிலுக்கு வடிவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சதீஷ்குமார் உட்பட 8 பேர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


இந்த நிலையில் வடிவேல் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விருகம்பாக்கம் போலீசார் கைவிட்டனர். அந்த வழக்கை ரத்து செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். சதீஷ்குமார் மீதான வழக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு உத்தரவை ரத்து செய்து, தனது புகாரை வேறொரு இன்ஸ்பெக்டர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டில் சதீஷ்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி கே.என்.பாஷா முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தது.


சதீஷ்குமார் தரப்பில் வக்கீல்கள் நமோ நாராயணன், பெரியசாமி ஆகியோர் ஆஜரானார்கள். ஆனால் வடிவேல் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. எனவே வழக்கின் இறுதி விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

நடிகர் கார்த்தி திருமணம்: கோவையில் குவிகிறார்கள் நட்சத்திரங்கள்



நடிகர் கார்த்தி திருமணம்: கோவையில் குவிகிறார்கள் நட்சத்திரங்கள்
 
நடிகர் சிவகுமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி- ரஞ்சனிக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் நாளை மறுநாள் (3-ந் தேதி) காலை 5.45 மணிக்கு கோவை கொடிசியா ஹாலில் நடைபெறுகிறது.
 
திருமணத்துக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது. திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக நடிகர் சிவகுமார் நேற்று காலையே கோவை சென்றுவிட்டார். உறவினர்களுடன் திருமண ஏற்பாடுகளை முன் நின்று செய்து வருகிறார். நேற்று இரவு 8.30 மணிக்கு நடிகர் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் சென்றனர்.
 
அவர்கள் அனைவரும் கோவை அவினாசி ரோட்டில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் தங்கியுள்ளனர். கோவைக்கு நேற்று இரவு சூர்யா வந்ததுமே திருமண வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார். கோவையில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து தனது தம்பியின் திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
 
இன்று காலை முதல் உறவினர்களை சந்தித்து திருமண பத்திரிக்கை கொடுத்து வருகிறார்.
 
கார்த்தியின் திருமணத்தில் நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்குவதற்கு வசதியாக ஓட்டல் லீ மெரிடியன், ரெசிடென்சி, ஜென்னி கிளப் மற்றும் முக்கிய ஓட்டல்களில் 600 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
திருமணத்தில் பங்கேற்க நடிகை நக்மாவும் கோவை வந்துள்ளார். கார்த்தி திருமணம் நடைபெறும் கொடிசியா ஹால் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. அலங்காரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ள திரைச்சீலைகள், ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சும் வண்ண விளக்குகள் ஆகியவை பிரமிப்பூட்டுகின்றன.
 
இது கொடிசியா ஹால்தானா என்று வியக்கும் வகையில் அரங்கை அப்படியே மாற்றி அமைத்திருக்கின்றனர். இதே போல் சிவகுமாரின் சொந்த ஊரான காசிக் கவுண்டன் புதூரில் உள்ள வீடும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. வீட்டு முன்பு பந்தல் போடும் பணி நிறைவு பெற்று திருமண களை குடி கொண்டுள்ளது.

8 வயது மகளை கதற கதற கழுத்தை அறுத்து கொன்ற கொடூர தாய்




8 வயது மகளை கதற கதற கழுத்தை அறுத்து
 கொன்ற கொடூர தாய்

பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (29). நடன கலைஞராகவும், கட்டிட மேஸ்திரியாகவும், வேலைப்பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ராதா (27). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தீபக்காந்த் (10) என்ற 5-வது படிக்கும் மகனும், நிவேதா (8) என்ற 3-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
 
இவர்கள் நல்லாகவுண்டம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர். அய்யப்பனுக்கும், ராதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அய்யப்பன் ராதா மீதும், ராதா அய்யப்பன் மீதும் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி மோதிக் கொண்டனர். இந்நிலையில் நேற்று மாலை நிவேதா பள்ளிக்கூடம் சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது ராதா வீட்டிற்குள் நிவேதாவை அழைத்து சென்றார்.
 
பின்னர் திடீரென அரிவாளை எடுத்து வந்து ஆட்டை அறுப்பது போல பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் கதற கதற அறுத்தார். இதில் அலறி துடித்த சிறுமி ரத்த வெள்ளத்தில் பிணமானாள்.

பின்னர் கொலை வெறி தீராத ராதா மகன் தீபக்காந்த்தையும் பிடித்தார். அரிவாளில் ரத்தம் சொட்ட...சொட்ட...ராதா கொலை வெறியில் இருந்ததை பார்த்த அவன் அலறினான்.

அப்போது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், மற்றும் வீட்டின் மற்றொரு அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்த அய்யப்பன் ஆகியோர் ஓடிவந்தனர்.
 
அப்போது நிவேதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதையும், தீபக்காந்த்தை கொலை செய்ய ராதா அரிவாளுடன் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டனர். இதையடுத்து அய்யப்பன், ராதாவிடம் இருந்த மகன் தீபக்காந்த்தை உயிருடன் மீட்டார். மகள் நிவேதாவின் பிணத்தை பார்த்து கதறி அழுதார். ஆனால் ராதா பித்து பிடித்தது போல் வெறியுடன் காணப்பட்டார்.
 
இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராதாவையும், அய்யப்பனனையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
 
அப்போது பெற்ற மகளையே கொடூரமாக கொலை செய்த ராதாவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,
 
’’காதலித்து திருமணம் செய்து கொண்ட என்னை ஏமாற்றியதால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். நான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் குழந்தைகள் அனாதையாகி விடுவார்களே என்று கருதி குழந்தைகளை கொலை செய்து விட்டு நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து பள்ளி விட்டு திரும்பிய எனது மகள் நிவேதாவை அரிவாளால் கழுத்தை அறுத்து கொன்றேன்.
 
எனது மகனை கொலை செய்ய முயன்ற போது அவன் அலறியதால் அனைவரும் ஓடிவந்து அவனை என்னிடம் இருந்து காப்பாற்றினர்’’ என்று தெரிவித்துள்ளார்.

மாணவி தீக்குளித்து சாவு



மாணவி தீக்குளித்து சாவு

 
தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்தவர் வடுகநாதன். விவசாயி. இவரது மகள் துர்க்காதேவி (வயது18). 10-ம் வகுப்பு தேர்வில் குறைந்த மார்க்கெடுத்ததால் மனமுடைந்த துர்க்காதேவி கடந்த 11-ந்தேதி தீக்குளித்துவிட்டார்.
 
தஞ்சை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது பற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கலெக்டர் சகாயம் வேண்டுகோள்



மாணவி தீக்குளித்து சாவு

 
தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்தவர் வடுகநாதன். விவசாயி. இவரது மகள் துர்க்காதேவி (வயது18). 10-ம் வகுப்பு தேர்வில் குறைந்த மார்க்கெடுத்ததால் மனமுடைந்த துர்க்காதேவி கடந்த 11-ந்தேதி தீக்குளித்துவிட்டார்.
 
தஞ்சை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார். இது பற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஜல்லிக்கட்டுக்கு தடை : ஹேமமாலினி கோரிக்கை


ஜல்லிக்கட்டுக்கு தடை : ஹேமமாலினி கோரிக்கை

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது விளையாடப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நடிகை ஹேமமாலினி கோரிக்கை விடுத்துள்ளார்.

மிருகவதை தடுப்புச்சட்டத்தை அந்த விளையாட்டு மீறுகிறது என அவர் கூறியுள்ளார்.

மாநிலங்களவை எம்பியான ஹேமமாலினி இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த விளையாட்டை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மிருகங்களை தாக்குவது, காயங்களை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றைத் தடுக்கும் 1960ம் ஆண்டின் மிருகவதைத் தடுப்புச் சட்டத்தை ஜல்லிக்கட்டு மீறுவதாக அமைந்துள்ளது என ஹேமமாலினி குறிப்பிட்டார்.

கடந்த இருபது ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 215 பேர் காயமடைந்துள்ளதாகவும்.
 
தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மதிப்பிட்டுள்ளது என்று, தெரிவித்துள்ள ஹேமமாலினி பொழுதுபோக்குக்காக காளை மாடுகளை பீதியடையச்செய்யும் இந்த விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கம் படத்தயாரிப்பாளர் வழக்கு : ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ்



சிங்கம் படத்தயாரிப்பாளர் வழக்கு : 
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ்


சூர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்த படம் சிங்கம் ஞானவேல்ராஜா தயாரித்தார். இப்படம் இந்தியில் அஜய்தேவ்கான், காஜல்அகர்வால் நடிக்க ரீமேக் ஆகியுள்ளது. வருகிற 22-ந்தேதி இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்தி “சிங்கம்” படத்தை தடைசெய்ய கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


அவர் தாக்கல் செய்த மனுவில்,  “சிங்கம் படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
 
அப்போது படத்தை விற்கும்போது 25 சதவீதம் பங்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டோம். தற்போது இப்படம் ரூ. 80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. அதில் 25 சதவீதம் பங்காக ரூ. 12 1/2 கோடி தர வேண்டும்.
 
ஆனால் அப்பணத்தை தராமல் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஞானவேல்ராஜா சார்பில் வக்கீல்கள் மனோகர், சகாதேவன் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன் இவ்வழக்கில் பதில் அளிக்கும்படி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

 

ராம்தேவ், அண்ணா ஹசாரேவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்



ராம்தேவ், அண்ணா ஹசாரேவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


பாபா ராம்தேவ், அண்ணா ஹசாரே உள்ளிட்டோரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


காஞ்சிபுரம் எம்பி விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபா ராம்தேவ், அண்ணா ஹசாரே ஆகியோரின் மக்கள் விரோத செயல்களை கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.


நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப் பேரவை உறுப்பினர், பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றியம் என எந்த அமைப்பிலும் பதவியில் இல்லாத இந்த 2 பேரிடமும் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.


இதனையும் மீறி இந்திய ஜனநாயக மரபுகளை குழித்தோண்டி புதைக்கும் வகையில் அரசை அச்சுறுத்தும் இவர்களின் செய்லகளை கண்டிப்பதாக கூட்டத்தில் பேசியவர்கள் கூறினர்.

திமுகவுடன் உறவு தொடருமா? ராமதாஸ் பதில்



திமுகவுடன் உறவு தொடருமா? ராமதாஸ் பதில்

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் மறுபரிசீலனை செய்யப்படும் என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 30 இடங்களில் போட்டியிட்ட பாமக 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.


திமுகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் பாமக தோல்வி அடைந்தது என்று அக்கட்சியைச் சேர்ந்த பலரும் கூறிவந்தனர். இந்த நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியைத் தொடரலாமா, வேண்டாமா என்பது குறித்து பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் இதனை தெரிவித்தார்.

தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்



தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்


 

 

 


 

தனியார் பள்ளிகளின் பகற்கொள்ளைக்கு முடிவு கட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என்று சென்னையில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவிந்தராஜன், ரவிராஜபாண்டியன் கமிட்டி என்று பெற்றோர்களை ஏமாற்றுவதை நிறுத்து. ஸ்மார்ட் கிளாஸ், நோட்டு புத்தகங்கள் சீருடை என தனியார் பள்ளிகள் வியாபாரம் செய்து கொள்ளையடிப்பதை வேடிக்கை பார்க்காதே.


கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தும் பெற்றோர்களின் குழந்தைகளை வகுப்புக்கு வெளியே நிறுத்துவது முழங்கால் போடவைப்பது போன்ற சித்திரவதைகளை செய்யும், தனியார் பள்ளி முதலாளிகளை கைது செய்து உள்ளே தள்ளு என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் கதி என்ன?



ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் கதி என்ன?
 
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 29ந் தேதி 600 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். ராமையா என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் அன்வர், சரவணன், முனியசாமி, ரமேஷ், குமார் ஆகிய 5 பேர் கரை திரும்பவில்லை.
 
அவர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததா? அல்லது அவர்கள் திசைமாறி சென்றார்களா? அல்லது இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றார்களா? என்பது தெரியவில்லை.
 
5 மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். மீனவர்கள் மாயமான சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான மீனவர்களை தேடி இன்று காலை ராமேசுவரம் மீனர்கள் சிலர் படகுகளில் சென்று தேடினர்.

Thursday, June 30, 2011

குழந்தை திருமணம் செய்து வைத்த 20பேர் கைது



குழந்தை திருமணம் செய்து வைத்த 20பேர் கைது

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் பழைய பழக்க வழக்கங்கள் மாறாத பல கிராமங்கள் உள்ளது.


எருமப்பட்டி அருகில் உள்ள ஜம்புமடை என்ற கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் சமூகத்தில் பெண்குழந்தைகள் திருமண வயதை தாண்டும் முன்னரே திருமணம் செய்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


கடந்த மாதத்தில் ஒரு இளவயது திருமணம் நடப்பதாக வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தை தொடர்ந்து, அதிகாரிகள் இளவயது திருமணங்கள் செய்விக்க கூடாது என்று கிராம மக்களுக்கு அறிவுருத்தியும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தும், கேளாமல் திருமணம் செய்துவைத்ததாக சொல்லி ஊர் போது மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாமக்கல் வட்டாச்சியர் திருஞானம், எருமப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜம்புமடை கிராமத்தை சேர்ந்த பைராநாயுடு, தளமாநாயுடு, அங்கம்மாள், வீரம்மாள்,வீராச்சாமி, வரதம்மாள், ராசுநாயுடு உட்பட இருபது நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நாமக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேர் நிருத்தப்பட்டார்கள்.


தாங்களுக்கு பிணை வழங்கக்கோரிய கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களை சொந்த பிணையில் விடுவித்த நடுவர் ஜோதி, கிராமங்களை கண்காணித்து இளவயது திருமணங்களை தடுத்து நிறுத்த முயற்சி எடுக்கும் படி வருவாய்த்துறை அதிகாரிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.

பொள்ளாச்சியில் கார் விபத்து: 3 பேர் பலி




பொள்ளாச்சியில் கார் விபத்து: 3 பேர் பலி


பொள்ளாச்சி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 3 பேர் பலியாயினர்.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் செல்வம் .இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஆணை மலை அருகே உள்ள மாசானியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஆம்னிவேனில் சென்றார். உடுமலை  ஆணைமலை ரோட்டில் உள்ள சின்னபாப்பனூத்து என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த திண்டுக்கல்  ஆணைமலைக்கு விடப்பட்டிருந்த ஸ்பெஷல் பஸ் மீது மோதியது.


விபத்தில் வேன் டிரைவர் தேவேந்திரன்(22) செல்வம்(32) அவரது மகன் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இவ்விபத்து குறித்து பொள்ளாச்சி கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.

கண்களில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம்



கண்களில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம்


 

தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து கண்களில் கருப்புத் துணி கட்டி கடலூர் மாவட்ட பெற்றோர், மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு பரிந்துரைத்ததற்கும் அதிகமாகக் கல்விக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தும், கட்டண விவரம் குறித்து விசாரிக்கச் செல்லும் அதிகாரிகள் மற்றும் பெற்றோரை தனியார் பள்ளி நிர்வாகங்கள் அவமரியாதை செய்து வரும் நிலையிலும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் பால்கி தலைமை வகித்தார்.

ஜுலை 30ல் குரூப் 2 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.



ஜுலை 30ல் குரூப் 2 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.

குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி ஜுலை 30 ந் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தேர்வு தள்ளிப்போகும் என்ற வதந்திகளை விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:


ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு என்று அழைக்கப்படும் குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் 104 மையங்களில் ஜுலை மாதம் 30 ந்தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. அதன்படி, ஜுலை 30 ந்தேதி அன்று திட்டமிட்டபடி, குரூப் 2 தேர்வு நடைபெறும். இதுதொடர்பாக ஒருசில ஊடகங்களில் வரும் தவறான செய்திகளை விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அனில்மேஷ்ராம் கூறி உள்ளார்.

தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்



தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

அரசு கேபிள் டிவியைத் துவக்கும் முன், தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்கிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.


இது தொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


அரசு கட்டுப்பாட்டில் எம்.எஸ்.ஓ.க்கள் இயங்கினால் அரசு கேபிள் டிவிக்குப் போட்டியாக தனியார் கேபிள் நிறுவனங்கள் செயல்படும். அப்போது கட்டண சேனல்களை தன் வசம் வைத்துள்ள தனியார் கேபிள் நிறுவனங்கள், அந்தச் சேனல்களை அரசுக்கு கேபிள் டிவிக்குத் தர தயாராக இருக்க மாட்டார்கள்.


இதனால் அரசு கேபிள் நிறுவனத்திற்கு நஷ்டமாவதோடு தேவையற்ற தொழில் போட்டிகள் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.


எனவே, தமிழக அரசு உடனடியாக தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடைமையாக்கி, அதன் பின்னர் அரசு கேபிள் நிறுவனத்தையும் இயக்கிட வேண்டுகிறோம். இதன் மூலம் பொதுமக்களும் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவியைப் பார்க்க இயலும் என்று அவர் கூறியுள்ளார்.

கூடலூரில் மூலிகை பண்ணை



கூடலூரில் மூலிகை பண்ணை


 

சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலா மையமாக இல்லாத கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியை உள்ளடக்கிய தேவாலா அரசு தோட்டக்கலை பண்ணையில் தோட்டக்கலை துறையின் சார்பில் மூலிகை பண்ணை அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது.

வெப்பம், மிதவெப்பம், குளிர் என தமிழ் நாட்டிலேயே மூன்று பருவ காலத்திலும் மக்கள் வந்து செல்லும் சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டத்தில் ஏலக்காய், இலவங்கம், பட்டை, குருமிளகு, ஜாதிக்காய் போன்ற வாசனை திரவியங்கள் அதிகம் விளைகிறது.

அத்தோடு மித வெப்ப பகுதியான தேவாலாவில் சீரகம், கடுகு, வெந்தயம், மல்லி, இஞ்சி, கடுகு, பூண்டு, திப்பிலி, ஜாதி பந்திரி, வெண்ணிலா, அதோவன், அன்னாசி பூ, வசம்பு போன்ற மூலிகை வகைகள் விளைகிறது.

இப்பண்ணை அமைப்பதின் மூலம், நீலகிரி மாவட்டத்தில் விளையும் வாசனை திரவியங்களையும், மூலிகைகளையும் ஒருசேர ஒரே இடத்தில் பயிர் செய்து மூலிகை பண்ணை அமைப்பதின் மூலம் நீலகிரி மாவட்டம் தேயிலை மட்டும் விளையும் மாவட்டம் என்ற பெயரை உடைக்கவும், பொது மக்களுக்கு தேவையான எல்லா வகை மூலிகைகளையும் உற்பத்தி செய்து கொடுப்பதன் மூலம், விவசாய மக்களுக்கு நல்ல முறையில் பொருளாதார வருவாயையும் ஏற்படுத்த முடியும்.

அத்தோடு சுற்றுலா பயணிகளால் ஒதுக்கப்பட்ட்ட பகுதியாக உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கமுடியும் என்று தோட்டக்கலை துறையின் இயக்குனர் முனைவர் ராம்.சுந்தர் தெரிவித்தார்.

Wednesday, June 29, 2011

போலி பெண் போலீசாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மதுரை போலீசார்




போலி பெண் போலீசாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மதுரை போலீசார்

மதுரை செல்லூரைச் சேர்ந்த ராணி என்பவர், தனது தோழி பெண் போலீசாரின் உடையை அணிந்துகொண்டு, மதுரை களிமேடு பகுதியில் உலாவந்துள்ளார்.

அப்போது களிமேடு போலீசார் சந்தேகப்பட்டு ராணியை விசாரித்துள்ளனர். போலீசார் விசாரித்ததில், ராணி போலி பெண் போலீஸ் என தெரிய வந்தது.


இதையடுத்து ராணியை மதுரை ஜெஎம்4 நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். போலீஸ் உடையை அணிந்த குற்றத்திற்காக அவரை 15 நாள் சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


ராணியை ஏற்கனவே சிவக்குமார் என்ற போலீஸ்காரர் காதல் திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை: அதிமுக மந்திரி நீக்கம்



மதுரை: அதிமுக மந்திரி நீக்கம்

அதிமுக மதுரை மாவட்டச் செயலாளராக செல்லூர் ராஜூ, கடந்த 5 ஆண்டுகளாக மதுரை மாவட்டச் செயலாளராக பதவி வகித்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரை, தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் அதிமுக தலைமை அவரை நியமித்தது.

இந்நிலையில் மாவட்டச் செயலாளராக இருந்த செல்லூர் ராஜூவை நீக்கிட்டு, மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏவான ஏ.கே.போஸை மதுரை மாவட்ட செயலாளராக அதிமுக தலைமை நியமித்துள்ளது.


ராஜ்யசபா வேட்பாளர் ரவி பெர்னாட்: ஜெ. அறிவிப்பு


ராஜ்யசபா வேட்பாளர் ரவி பெர்னாட்: ஜெ. அறிவிப்பு

அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக, ஏ. வில்லியம் ரபி பெர்னார்ட்டை, கட்சி பொதுச் செயலாளரும், மாநில முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த ராமலிங்கம், தன் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இதற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்பாளராக ரபி பெர்னார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். இடைத்தேர்தல், ஜூலை 22ம் தேதி நடைபெற உள்ளது.

 






 

 

 


 

இலவச லேப்-டாப் : பட்டியல் தயாரிப்பு



இலவச லேப்-டாப் :  பட்டியல் தயாரிப்பு
 
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.
 
இதை செயல்படுத்தும் விதமாக முதல்கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு லேப்-டாப் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 15-ந் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
 
இதற்காக லேப்-டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் மாதிரி லேப்-டாப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் லேப்-டாப் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு தயாரிக்கும் பணி தொடங்கிவிடும்.
 
இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எவ்வளவு லேப்-டாப் தேவை என பட்டியல் தருமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக பிளஸ்-2 மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக பட்டியலிடப்பட்டு வருகிறது.
 
இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க எண்ணிக்கை சேகரிக்கப்படுகிறது.   பிளஸ்-1 வகுப்பில் மாணவ-மாணவிகள் இன்னும் சேர்ந்து வருவதால் முழுமையாக கணக்கெடுத்து முடியவில்லை. ஆனால் பிளஸ்-2 வகுப்புக்கு கணக்கெடுத்து முடிக்கப்பட்டு விட்டது. வகுப்பு வாரியாக பள்ளி கல்வித்துறை அதிகாரி களுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

கவிதாலயா முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் : இயக்குநர் ஸெல்வன்



கவிதாலயா முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்
: இயக்குநர் ஸெல்வன்

இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் ஸெல்வன்,   சூரி படத்தின் மூலம் இயக்குநர் ஆனார்.   இதையடுத்து  ஜீவன்-மேக்னா ஜோடியாக நடித்த படம் கிருஷ்ண லீலை படத்தை இயக்கினார். இப்படம் முடிந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் ரிலீசாகவில்லை.

படத்தை வெளியிடக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக இயக்குனர் ஸெல்வன் கூறியுள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
 
“கிருஷ்ணலீலை” படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. பின்னர் அப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்துக்கு விற்று விட்டனர். படப்பிடிப்பு டப்பிங் பணிகள் முடிந்துள்ளது. 
 
2 வருடங்கள் 3 மாதங்களுக்கு முன்பே 90 சதவீதம் வேலைகள் முடிந்து படம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பலமுறை அலைந்து விட்டேன். படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படம் வராததால் புதுப்பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை.
 
“கிருஷ்ணலீலை” ரிலீஸ் ஆன பிறகு பட வாய்ப்பு தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் பெற்றோர்களை வைத்துக் கொண்டு என்னால் குடும்பம் நடத்த இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வருமானமின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன்.
 
எனவே படத்தை ரிலீஸ் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வருகிற ஜூலை 5-ந்தேதி முதல் கவிதாலயா நிறுவனம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்’’ என்று கூறியுள்ளார்.
 
உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தார்.

செல்போன் வியாபாரிகள் நாளை கடை அடைப்பு


 செல்போன் வியாபாரிகள் நாளை கடை அடைப்பு
 
ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் உள்பட தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் சொந்தமாக விற்பனை நிலையங்கள் வைத்துள்ளன. என்றாலும் இந்த நிறுவனங்கள் ரீசார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு தனியார்களையே நம்பி உள்ளன. 
 
ரீ-சார்ஜ் மற்றும் புதிய இணைப்பு விற்பனைக்கு தனியார் செல்போன் கடைக்காரர்கள் கணிசமான தொகையை கமிசனாக பெற்று வருகிறார்கள். இந்த கமிசன் தொகையை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைத்துள்ளன. 
 
இதனால் செல்போன் கடைக்காரர்களுக்கு லாபத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது செல்போன் கடைகாரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து நாளை (வியாழன்) ஒருநாள் கடை அடைப்பு போராட்டம் நடத்த செல்போன் கடைக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
 
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
’’செல்போன் உபயோகிப்பாளர்களின் பணத்தை சிறப்பு சேவை என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் எடுத்து கோடி, கோடியாக லாபம் அடைவதை ஏற்க முடியாது. புதிய இணைப்பு விற்பனையாளர்களின் லாபம் குறைக்கப்பட்டதை கண்டிக்கிறோம்.
 
இதை வலியுறுத்தி 30-ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்போன் கடைகள் அடைக்கப்படும். ரீசார்ஜ், புதிய இணைப்பு விற்பனை எதுவும் நாளை பகலில் நடைபெறாது’’ என்று அறிவித்துள்ளனர்.

நீரிழிவு நோயாளிகள் சென்னையில் அதிகரிப்பு


நீரிழிவு நோயாளிகள் சென்னையில் அதிகரிப்பு

நீரிழிவு நோயை கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் டெல்லியில் நடந்தது. இதை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி குலாம்நபி ஆசாத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

 
டெல்லியில் 31 லட்சம் குடிசைவாசிகள் உள்ளனர். இவர்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும், அவர்களிடம் இந்த நோய்கள் உள்ளனவா என்று கண்டறிய மருத்துவ சோதனைகளும் நடத்தப்படும்.  
 
தொற்று நோய் வகையை சாராத, இருதய நோய், நீரிழிவு, கேன்சர், ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களுக்காக சோதனை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்.
 
30 வயதுக்கு மேற்பட்டவர்களும், கர்ப்பிணி பெண்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வசதியாக நாடு முழுவதும் 20 ஆயிரம் துணை மையங்கள் ஏற்படுத்தப்படும். 

 
10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட 33 நகரங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களிடம் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், போன்ற நோய்களை கண்டறியும் பரிசோதனைகளும், விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட உள்ளன.  

 
 நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை சென்னையிலும், பெங்களூரிலும்தான் அதிகமாக உள்ளன. தற்போதுள்ள அளவைவிட விரைவில் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு, 3 லட்சம் பேரிடம் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.
 
அவர்களில் 50 ஆயிரம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தது. தவிர 60 ஆயிரம் பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 40 ஆயிரம் பேருக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதும் கண்டறியப்பட்டது. கர்ப்பிணி பெண்களிடம் நடத்திய சோதனையில், 3 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்துள்ளது என்று பேசினார்.

Tuesday, June 28, 2011

பி.எல்.படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி நீடிப்பு




வாஸ்து கோளாறால் மிரட்டும் மேயர் பங்களா
 
திருச்சி மாநகராட்சி அருகே தாசில்தார் அலுவலகம் பின்புறம், மேயர் மற்றும் துணை மேயருக்கு என 2 பங்களாக்கள் கட்டப்பட்டது. மேயர் பங்களா ரூ.48 லட்சம் செலவில் கட்டப்பட்டது. துணை மேயர் பங்களா ரூ.55 லட்சத்தில் கட்டப்பட்டது. இதில் துணை மேயர் அன்பழகன் மட்டும், துணை மேயர் பங்களாவில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
 
அருகில் உள்ள மேயர் பங்களா சுமார் 12 வருடமாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பங்களாவை சுற்றி புல்புதர்கள் வளர்ந்து உள்ளன.
 
இந்த பங்களாவிற்கு மேயர் பதவியில் உள்ளவர்கள் குடிவர தயங்குகின்றனர். இதற்கு வாஸ்து பிரச்சினையே காரணம் என பரபரப்பாக கூறப்படுகிறது. பங்களா கட்டப்பட்டபோது வாஸ்து முறை பின் பற்றப்படவில்லை.
 
பங்களா அருகில் உள்ள கிணறு வாஸ்துபடி அமையவில்லை. வாசல், சமையல் அறை, தண்ணீர் தொட்டி ஆகியவையும், வாஸ்து முறைப்படி இல்லை என அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள்.
 
இதனால் மேயர் பங்களா அரசியல் வாதிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது என அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள்.
 
அதற்கு சில அரசியல் பிரமுகர்களின் திடீர் சரிவையும் காரணமாக கூறுகின்றனர்.
 
இதனால் மேயர் பங்களாவில் குடியேற தயக்கம் காட்டுகிறார்கள். இருப்பினும் துணை மேயர் அன்பழகன், தைரியமாக உள்ளார். ஆனாலும் அவருக்கும் பங்களா கட்டப்பட்ட பிறகு எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி கிடைக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்.

சாருபாலா தொண்டமான் மேயர் பதவி ராஜினாமா செய்ததும் மேயர் பொறுப்பு பதவி வகித்தவர் மேயர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் மெஜாரிட்டி தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தும் மேயர் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு மேயர் பங்களா ராசியையே கூறுகிறார்கள்.

ஆனால் இது குறித்து கேட்டால் மேயர் தரப்பிலும், துணை மேயர் தரப்பிலும் வாஸ்து ஒரு பிரச்சினையே இல்லை என்கிறார்கள். மேயர் சுஜாதா அப்போதுதான் புதுவீடு கட்டி குடியேறியதால் மேயர் பங்களாவிற்கு குடியேறவில்லை.
 
எனவே வாஸ்து பீதி காரணமெல்லாம் கிடையாது என்கிறார்கள். துணை மேயர் அன்பழகன், ஆதரவளார்களோ, திராவிடர் பாரம்பரியத்தில் வந்த எங்களுக்கு வாஸ்து எல்லாம் தூசு. அண்ணன் மேயரானதும், மேயர் பங்களாவில் குடியேறுவார் அப்போது வாஸ்து எங்கே போகப்போறது பாருங்க என்கிறார்கள். இதனால்... உள்ளாட்சி தேர்தலில் மேயர் பங்களா வாஸ்து ராசி... வெற்றி -தோல்வியில் முக்கிய இடம்பிடிக்கும் என்கிறார்கள்.

 

முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை




வாஸ்து கோளாறால் மிரட்டும் மேயர் பங்களா
 
திருச்சி மாநகராட்சி அருகே தாசில்தார் அலுவலகம் பின்புறம், மேயர் மற்றும் துணை மேயருக்கு என 2 பங்களாக்கள் கட்டப்பட்டது. மேயர் பங்களா ரூ.48 லட்சம் செலவில் கட்டப்பட்டது. துணை மேயர் பங்களா ரூ.55 லட்சத்தில் கட்டப்பட்டது. இதில் துணை மேயர் அன்பழகன் மட்டும், துணை மேயர் பங்களாவில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
 
அருகில் உள்ள மேயர் பங்களா சுமார் 12 வருடமாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பங்களாவை சுற்றி புல்புதர்கள் வளர்ந்து உள்ளன.
 
இந்த பங்களாவிற்கு மேயர் பதவியில் உள்ளவர்கள் குடிவர தயங்குகின்றனர். இதற்கு வாஸ்து பிரச்சினையே காரணம் என பரபரப்பாக கூறப்படுகிறது. பங்களா கட்டப்பட்டபோது வாஸ்து முறை பின் பற்றப்படவில்லை.
 
பங்களா அருகில் உள்ள கிணறு வாஸ்துபடி அமையவில்லை. வாசல், சமையல் அறை, தண்ணீர் தொட்டி ஆகியவையும், வாஸ்து முறைப்படி இல்லை என அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள்.
 
இதனால் மேயர் பங்களா அரசியல் வாதிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது என அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள்.
 
அதற்கு சில அரசியல் பிரமுகர்களின் திடீர் சரிவையும் காரணமாக கூறுகின்றனர்.
 
இதனால் மேயர் பங்களாவில் குடியேற தயக்கம் காட்டுகிறார்கள். இருப்பினும் துணை மேயர் அன்பழகன், தைரியமாக உள்ளார். ஆனாலும் அவருக்கும் பங்களா கட்டப்பட்ட பிறகு எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி கிடைக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்.

சாருபாலா தொண்டமான் மேயர் பதவி ராஜினாமா செய்ததும் மேயர் பொறுப்பு பதவி வகித்தவர் மேயர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் மெஜாரிட்டி தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தும் மேயர் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு மேயர் பங்களா ராசியையே கூறுகிறார்கள்.

ஆனால் இது குறித்து கேட்டால் மேயர் தரப்பிலும், துணை மேயர் தரப்பிலும் வாஸ்து ஒரு பிரச்சினையே இல்லை என்கிறார்கள். மேயர் சுஜாதா அப்போதுதான் புதுவீடு கட்டி குடியேறியதால் மேயர் பங்களாவிற்கு குடியேறவில்லை.
 
எனவே வாஸ்து பீதி காரணமெல்லாம் கிடையாது என்கிறார்கள். துணை மேயர் அன்பழகன், ஆதரவளார்களோ, திராவிடர் பாரம்பரியத்தில் வந்த எங்களுக்கு வாஸ்து எல்லாம் தூசு. அண்ணன் மேயரானதும், மேயர் பங்களாவில் குடியேறுவார் அப்போது வாஸ்து எங்கே போகப்போறது பாருங்க என்கிறார்கள். இதனால்... உள்ளாட்சி தேர்தலில் மேயர் பங்களா வாஸ்து ராசி... வெற்றி -தோல்வியில் முக்கிய இடம்பிடிக்கும் என்கிறார்கள்.

 

6 குடும்பத்தினர் 3 ஆண்டுகளாக ஊரை விட்டு தள்ளிவைப்பு


6 குடும்பத்தினர் 3 ஆண்டுகளாக ஊரை விட்டு தள்ளிவைப்பு

தர்மபுரி அருகே ஊரை விட்டு 6 குடும்பங்களை தள்ளி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த குடும்பங்களை சேர்ந்த 25 பேர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் நார்த்தம்பட்டி அருந்ததியர் காலனியை சேர்ந்த 6 குடும்பத்தினர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில்,

’’நார்த்தம்பட்டி கிராமத்தில் உள்ள அருந்தியர் காலனியில் 40 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அதில் 6 குடும்பங்களை சேர்ந்தவர்களை மட்டும் ஊரை விட்டு தள்ளி வைத்து உள்ளார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காலனியில் உள்ள மாரியம்மன்கோவிலில் திடீரென 31/2 பவுன் தங்க நகை மாயமானது. அந்த நகையை எடுத்தது யார்? என தட்டி கேட்டதன் விளைவாக எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதால் கடந்த 3 ஆண்டுகளாக ஊரில் உள்ள தண்ணீர் குழாயில் குடிநீர் எடுக்கவும், கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது. பிற குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் எங்கள் குழந்தைகளுடன் பேசினால் அவர்களுக்கு கட்டப்பஞ்சாயத்து நடத்தி அபராதம் விதிக்கப்படுகிறது.

இத்தகைய செயல்பாடுகளால் 6 குடும்பங்களை சேர்ந்த அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஊர்திருவிழா தொடங்கி உள்ளது.

இந்த பண்டிகையில் எங்கள் 6 குடும்பங்களை சேர்ந்தவர்களை மட்டும் சேர்த்து கொள்ளாமல் தள்ளி வைத்துள்ளனர். எனவே எங்களை தள்ளி வைக்க காரணமான காலனியின் முக்கிய பிரமுகர்களிடம் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்.

நாங்களும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளவும், ஊர் மக்களோடு சேர்ந்து வாழவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இவர்கள் குடும்பமாக வந்து மனு கொடுக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்திருந்த காட்சி உருக்கமாக இருந்தது.

இந்த மனு தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக நூதன போராட்டம்


பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆயிரம் பீடி சுற்றினால் 114 ரூபாய் கூலி வழங்க வேண்டும், நிலுவைத்தொகையை உடனே வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (28-ந்தேதி) வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நெல்லை மாவட்ட தமிழ்நாடு பீடித்தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்தது.
 
அதற்கு மற்ற கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமான பீடித்தொழிலாளர்கள் உள்ளனர்.
 
அவர்களில் பெரும்பாலானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் பீடித்தொழிலாளர்கள் அனைவரும் பீடி இலைகள் வாங்க, கட்டிய பீடிகளை கொடுக்க கம்பெனிகளுக்கு செல்லவில்லை.
 
நெல்லை மாவட்ட ஜனநாயக பீடித்தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ராமையா, வெங்கட்ராமன், செல்வி, ஜெயக்கொடி, மாரியம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காற்றாடி பறக்க விடுவதற்கு முற்றிலும் தடை




வாஸ்து கோளாறால் மிரட்டும் மேயர் பங்களா
 
திருச்சி மாநகராட்சி அருகே தாசில்தார் அலுவலகம் பின்புறம், மேயர் மற்றும் துணை மேயருக்கு என 2 பங்களாக்கள் கட்டப்பட்டது. மேயர் பங்களா ரூ.48 லட்சம் செலவில் கட்டப்பட்டது. துணை மேயர் பங்களா ரூ.55 லட்சத்தில் கட்டப்பட்டது. இதில் துணை மேயர் அன்பழகன் மட்டும், துணை மேயர் பங்களாவில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்.
 
அருகில் உள்ள மேயர் பங்களா சுமார் 12 வருடமாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பங்களாவை சுற்றி புல்புதர்கள் வளர்ந்து உள்ளன.
 
இந்த பங்களாவிற்கு மேயர் பதவியில் உள்ளவர்கள் குடிவர தயங்குகின்றனர். இதற்கு வாஸ்து பிரச்சினையே காரணம் என பரபரப்பாக கூறப்படுகிறது. பங்களா கட்டப்பட்டபோது வாஸ்து முறை பின் பற்றப்படவில்லை.
 
பங்களா அருகில் உள்ள கிணறு வாஸ்துபடி அமையவில்லை. வாசல், சமையல் அறை, தண்ணீர் தொட்டி ஆகியவையும், வாஸ்து முறைப்படி இல்லை என அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள்.
 
இதனால் மேயர் பங்களா அரசியல் வாதிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது என அரசியல் பிரமுகர்கள் கூறுகிறார்கள்.
 
அதற்கு சில அரசியல் பிரமுகர்களின் திடீர் சரிவையும் காரணமாக கூறுகின்றனர்.
 
இதனால் மேயர் பங்களாவில் குடியேற தயக்கம் காட்டுகிறார்கள். இருப்பினும் துணை மேயர் அன்பழகன், தைரியமாக உள்ளார். ஆனாலும் அவருக்கும் பங்களா கட்டப்பட்ட பிறகு எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி கிடைக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்.

சாருபாலா தொண்டமான் மேயர் பதவி ராஜினாமா செய்ததும் மேயர் பொறுப்பு பதவி வகித்தவர் மேயர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் மெஜாரிட்டி தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தும் மேயர் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு மேயர் பங்களா ராசியையே கூறுகிறார்கள்.

ஆனால் இது குறித்து கேட்டால் மேயர் தரப்பிலும், துணை மேயர் தரப்பிலும் வாஸ்து ஒரு பிரச்சினையே இல்லை என்கிறார்கள். மேயர் சுஜாதா அப்போதுதான் புதுவீடு கட்டி குடியேறியதால் மேயர் பங்களாவிற்கு குடியேறவில்லை.
 
எனவே வாஸ்து பீதி காரணமெல்லாம் கிடையாது என்கிறார்கள். துணை மேயர் அன்பழகன், ஆதரவளார்களோ, திராவிடர் பாரம்பரியத்தில் வந்த எங்களுக்கு வாஸ்து எல்லாம் தூசு. அண்ணன் மேயரானதும், மேயர் பங்களாவில் குடியேறுவார் அப்போது வாஸ்து எங்கே போகப்போறது பாருங்க என்கிறார்கள். இதனால்... உள்ளாட்சி தேர்தலில் மேயர் பங்களா வாஸ்து ராசி... வெற்றி -தோல்வியில் முக்கிய இடம்பிடிக்கும் என்கிறார்கள்.

 

ராமலிங்க அடிகளார் வீட்டை அரசுடமையாக்க கோரிக்கை

ராமலிங்க அடிகளார் வீட்டை அரசுடமையாக்க கோரிக்கை


 

அகில இந்திய வேளாளர் - பிள்ளைமார், செங்குந்தர் - முதலியார் கூட்டமைப்பு தலைவர் கே.ராஜன், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,

’’சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் உள்ள இல்லத்தில் ராமலிங்க அடிகளார் 33 ஆண்டுகளாக வாழ்ந்தார். அதன்பின்னர், வடலூர் சென்று சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவி ஆன்மீகத் தொண்டாற்றினார்.]

ஆனால், சென்னையில் 33 ஆண்டுகள் ராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீடு கவனிப்பாரற்று பாழடைந்த நிலையில் உள்ளது. அதன் உரிமையாளர்கள் வெளியூரில் இருந்து கொண்டு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளனர்.



2001-2006-ல் நடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை அரசுடமையாக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த வீட்டை அரசுடமையாக்கி அருங்காட்சியகம் அமைத்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

 

 


 

காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது: டி.ராஜேந்தர்




காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது: டி.ராஜேந்தர்





காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது என்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.


குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


லட்சிய தி.மு.க.வின் தென்மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசியலில் தீவிரமாக லட்சிய தி.மு.க. செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுகிறது. பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இதுதான் மத்திய அரசின் சாதனை.


கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க. தோல்வி அடைந்தது. சமச்சீர் கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு பயன்படும். எனவே அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டமன்ற புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் இயங்க வேண்டும் என்றார்.

இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசு பஸ் ஜப்தி



இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசு பஸ் ஜப்தி

மயிலாடுதுறை அருகே வேலங்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). இவர் கடந்த 5 2 2007 அன்று மயிலாடுதுறை காமராஜர் பஸ்நிலையத்தில் சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் ஏற முயன்றார்.


அப்போது பஸ் புறப்பட்டதால் செல்வம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் செல்வத்திற்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மயிலாடுதுறை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் செல்வம் வழக்கு தொடந்து, அதில் பஸ் டிரைவரின் கவனக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்கு இழப்பீட்டுத்தொகை கேட்டார்.


வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தூர்பாண்டியன், கடந்த 20 08 2009 அன்று செல்வத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக வட்டியுடன் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 777 வழங்க சென்னை அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட செல்வத்திற்கு இதுவரை இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை.


இதையடுத்து நீதிபதி செந்தூர்பாண்டியன், சென்னை அரசுவிரைவு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட்டு அலுவலரின் உதவியுடன் 27.06.2011 அன்று மயிலாடுதுறை பஸ்நிலையத்தில் மேற்கண்ட பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஓப்படைக்கப்பட்டது.

ஈரோடு: 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி



ஈரோடு: 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி

காடுகளில் உள்ள யானைகள் பாதை மாறுவதை தடுக்க 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஈரோடு வனக்கோட்ட அலுவலர் அருண் தெரிவித்துள்ளார்.

ஈரோடு வணக்கோட்டத்தில் சுமார் 1200 யானைகள் இருக்கிறது. மழையில்லாத காலத்தில் தண்ணீருக்ககவும், உணவுக்காகவும் யானைகள் காட்டை விட்டு விவசாய நிலங்களுக்குள்ளும், ஊருக்குள்ளும் வருவதை தடுக்க சத்தியமங்கலம் வணக்கொட்டத்தில் ஐம்பது கிலோமீட்டர் தொலைவுக்கும், ஈரோடு வணக்கோட்டத்தில் இருபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கும் வனப்பகுதிகளை தாண்டி யானைகள் ஊருக்குள், வரமுடியாத அளவில் குழிகள் வெட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மீனவக் கிராமங்களுக்குத் தூண்டில் வளைவுகள்: வைகோ கோரிக்கை



இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசு பஸ் ஜப்தி

மயிலாடுதுறை அருகே வேலங்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). இவர் கடந்த 5 2 2007 அன்று மயிலாடுதுறை காமராஜர் பஸ்நிலையத்தில் சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் ஏற முயன்றார்.


அப்போது பஸ் புறப்பட்டதால் செல்வம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் செல்வத்திற்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மயிலாடுதுறை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் செல்வம் வழக்கு தொடந்து, அதில் பஸ் டிரைவரின் கவனக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்கு இழப்பீட்டுத்தொகை கேட்டார்.


வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தூர்பாண்டியன், கடந்த 20 08 2009 அன்று செல்வத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக வட்டியுடன் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 777 வழங்க சென்னை அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட செல்வத்திற்கு இதுவரை இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை.


இதையடுத்து நீதிபதி செந்தூர்பாண்டியன், சென்னை அரசுவிரைவு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட்டு அலுவலரின் உதவியுடன் 27.06.2011 அன்று மயிலாடுதுறை பஸ்நிலையத்தில் மேற்கண்ட பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஓப்படைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து சென்ற அரசு பேருந்தில் தீ



இழப்பீட்டுத் தொகை வழங்காத அரசு பஸ் ஜப்தி

மயிலாடுதுறை அருகே வேலங்குடி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). இவர் கடந்த 5 2 2007 அன்று மயிலாடுதுறை காமராஜர் பஸ்நிலையத்தில் சென்னை செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்சில் ஏற முயன்றார்.


அப்போது பஸ் புறப்பட்டதால் செல்வம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் செல்வத்திற்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மயிலாடுதுறை கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் செல்வம் வழக்கு தொடந்து, அதில் பஸ் டிரைவரின் கவனக்குறைவால் மருத்துவ சிகிச்சைக்கு இழப்பீட்டுத்தொகை கேட்டார்.


வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தூர்பாண்டியன், கடந்த 20 08 2009 அன்று செல்வத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக வட்டியுடன் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 777 வழங்க சென்னை அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட செல்வத்திற்கு இதுவரை இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை.


இதையடுத்து நீதிபதி செந்தூர்பாண்டியன், சென்னை அரசுவிரைவு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட்டு அலுவலரின் உதவியுடன் 27.06.2011 அன்று மயிலாடுதுறை பஸ்நிலையத்தில் மேற்கண்ட பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஓப்படைக்கப்பட்டது.

திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை



திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

















சேலம்: நில மோசடி புகாரில் திமுக பிரமுகர் கைது




காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது: டி.ராஜேந்தர்





காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது என்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.


குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


லட்சிய தி.மு.க.வின் தென்மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசியலில் தீவிரமாக லட்சிய தி.மு.க. செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுகிறது. பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இதுதான் மத்திய அரசின் சாதனை.


கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க. தோல்வி அடைந்தது. சமச்சீர் கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு பயன்படும். எனவே அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டமன்ற புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் இயங்க வேண்டும் என்றார்.

ஜெயலலிதாவின் கருத்துக்கு தங்கபாலு வரவேற்பு



திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

















ஜெயலலிதாவுடன் சத்தியராஜ், மனோரமா சந்திப்பு



திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

















ஜெயலலிதாவுடன் சிவக்குமார், சூர்யா சந்திப்பு



திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

















மா.செயலாளராக அமைச்சர் சிவபதி நியமனம்



திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

















சென்னையில் நடமாடும் தானியங்கி சிக்னல்



திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

















சொத்துகுவிப்பு வழக்கு: மாஜி அமைச்சர் விடுதலை



சொத்துகுவிப்பு வழக்கு: மாஜி அமைச்சர் விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


முந்தைய அதிமுக ஆட்சியில் செ.மா. வேலுச்சாமி அமைச்சராக இருந்தார். அதற்குப்பின் திமுக தலைமையிலான ஆட்சி வந்தது. கடந்த 2009ல், ‌வேலுச்சாமியின் கோவை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக, ரூ. 52.54 லட்சம் அதிகமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு கோவை மாவட்ட குற்றவியல் நீ‌திமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி பானுமதி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரமோ, சாட்சியோ இல்லை என்றும், இதனால் இவர்கள‌ை விடுதலை செய்து உத்தரவிடுவதாக நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார்.

ரசிகர்களிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா



திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை

திமுக மாவட்டக் குழுக்களுக்கு பதிலாக பாராளுமன்ற குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் கீழ் சட்டப்பேரவை தொகுதிக்குழுக்கள் பணியாற்றும். இதுகுறித்து கருத்து தெரிவிப்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

















புரியாத டைட்டில்: நடிகர் கரண் வருத்தம்



சொத்துகுவிப்பு வழக்கு: மாஜி அமைச்சர் விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


முந்தைய அதிமுக ஆட்சியில் செ.மா. வேலுச்சாமி அமைச்சராக இருந்தார். அதற்குப்பின் திமுக தலைமையிலான ஆட்சி வந்தது. கடந்த 2009ல், ‌வேலுச்சாமியின் கோவை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக, ரூ. 52.54 லட்சம் அதிகமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு கோவை மாவட்ட குற்றவியல் நீ‌திமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி பானுமதி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரமோ, சாட்சியோ இல்லை என்றும், இதனால் இவர்கள‌ை விடுதலை செய்து உத்தரவிடுவதாக நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார்.

காங்கிரசில் இணைந்த பாமக மாவட்ட தலைவர்



சொத்துகுவிப்பு வழக்கு: மாஜி அமைச்சர் விடுதலை

சொத்து குவிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


முந்தைய அதிமுக ஆட்சியில் செ.மா. வேலுச்சாமி அமைச்சராக இருந்தார். அதற்குப்பின் திமுக தலைமையிலான ஆட்சி வந்தது. கடந்த 2009ல், ‌வேலுச்சாமியின் கோவை வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக, ரூ. 52.54 லட்சம் அதிகமாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு கோவை மாவட்ட குற்றவியல் நீ‌திமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில், முன்னாள் அமைச்சர் வேலுச்சாமி மற்றும் அவரது மனைவி பானுமதி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு போதிய ஆதாரமோ, சாட்சியோ இல்லை என்றும், இதனால் இவர்கள‌ை விடுதலை செய்து உத்தரவிடுவதாக நீதிபதி சீனிவாசன் தீர்ப்பு வழங்கினார்.

பெண்கள் வருகை குறைவால் திரைத்துறை வீழ்ச்சி : டி.ஆர்.




காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது: டி.ராஜேந்தர்





காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது என்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.


குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


லட்சிய தி.மு.க.வின் தென்மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசியலில் தீவிரமாக லட்சிய தி.மு.க. செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுகிறது. பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இதுதான் மத்திய அரசின் சாதனை.


கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க. தோல்வி அடைந்தது. சமச்சீர் கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு பயன்படும். எனவே அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டமன்ற புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் இயங்க வேண்டும் என்றார்.

சாலமன் பாப்பையா பேச்சு : திமுகவினர் அதிர்ச்சி




காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது: டி.ராஜேந்தர்





காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது என்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.


குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


லட்சிய தி.மு.க.வின் தென்மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசியலில் தீவிரமாக லட்சிய தி.மு.க. செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுகிறது. பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இதுதான் மத்திய அரசின் சாதனை.


கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க. தோல்வி அடைந்தது. சமச்சீர் கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு பயன்படும். எனவே அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டமன்ற புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் இயங்க வேண்டும் என்றார்.