Thursday, June 30, 2011
பொள்ளாச்சியில் கார் விபத்து: 3 பேர் பலி
பொள்ளாச்சியில் கார் விபத்து: 3 பேர் பலி
பொள்ளாச்சி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 3 பேர் பலியாயினர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் செல்வம் .இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஆணை மலை அருகே உள்ள மாசானியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஆம்னிவேனில் சென்றார். உடுமலை ஆணைமலை ரோட்டில் உள்ள சின்னபாப்பனூத்து என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த திண்டுக்கல் ஆணைமலைக்கு விடப்பட்டிருந்த ஸ்பெஷல் பஸ் மீது மோதியது.
விபத்தில் வேன் டிரைவர் தேவேந்திரன்(22) செல்வம்(32) அவரது மகன் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இவ்விபத்து குறித்து பொள்ளாச்சி கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.
Labels:
பொள்ளாச்சியில்,
விபத்து:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment