Thursday, June 30, 2011
கண்களில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம்
கண்களில் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம்
தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து கண்களில் கருப்புத் துணி கட்டி கடலூர் மாவட்ட பெற்றோர், மாணவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு பரிந்துரைத்ததற்கும் அதிகமாகக் கல்விக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தும், கட்டண விவரம் குறித்து விசாரிக்கச் செல்லும் அதிகாரிகள் மற்றும் பெற்றோரை தனியார் பள்ளி நிர்வாகங்கள் அவமரியாதை செய்து வரும் நிலையிலும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் பால்கி தலைமை வகித்தார்.
Labels:
ஆர்ப்பாட்டம்,
கட்டி,
கண்களில்,
கருப்புத்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment