Thursday, June 30, 2011

குழந்தை திருமணம் செய்து வைத்த 20பேர் கைது



குழந்தை திருமணம் செய்து வைத்த 20பேர் கைது

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் பழைய பழக்க வழக்கங்கள் மாறாத பல கிராமங்கள் உள்ளது.


எருமப்பட்டி அருகில் உள்ள ஜம்புமடை என்ற கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் சமூகத்தில் பெண்குழந்தைகள் திருமண வயதை தாண்டும் முன்னரே திருமணம் செய்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


கடந்த மாதத்தில் ஒரு இளவயது திருமணம் நடப்பதாக வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தை தொடர்ந்து, அதிகாரிகள் இளவயது திருமணங்கள் செய்விக்க கூடாது என்று கிராம மக்களுக்கு அறிவுருத்தியும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தும், கேளாமல் திருமணம் செய்துவைத்ததாக சொல்லி ஊர் போது மக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நாமக்கல் வட்டாச்சியர் திருஞானம், எருமப்பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜம்புமடை கிராமத்தை சேர்ந்த பைராநாயுடு, தளமாநாயுடு, அங்கம்மாள், வீரம்மாள்,வீராச்சாமி, வரதம்மாள், ராசுநாயுடு உட்பட இருபது நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நாமக்கல் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேர் நிருத்தப்பட்டார்கள்.


தாங்களுக்கு பிணை வழங்கக்கோரிய கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களை சொந்த பிணையில் விடுவித்த நடுவர் ஜோதி, கிராமங்களை கண்காணித்து இளவயது திருமணங்களை தடுத்து நிறுத்த முயற்சி எடுக்கும் படி வருவாய்த்துறை அதிகாரிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment