Tuesday, June 28, 2011

காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது: டி.ராஜேந்தர்




காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது: டி.ராஜேந்தர்





காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால்தான் தி.மு.க. தோல்வி அடைந்தது என்று லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.


குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,


லட்சிய தி.மு.க.வின் தென்மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசியலில் தீவிரமாக லட்சிய தி.மு.க. செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுகிறது. பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து உள்ளது. இதுதான் மத்திய அரசின் சாதனை.


கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தி.மு.க. தோல்வி அடைந்தது. சமச்சீர் கல்வி ஏழை, எளிய மாணவர்களுக்கு பயன்படும். எனவே அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சட்டமன்ற புதிய கட்டிடத்தில் சட்டமன்றம் இயங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment