Thursday, June 30, 2011
ஜுலை 30ல் குரூப் 2 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.
ஜுலை 30ல் குரூப் 2 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி.
குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி ஜுலை 30 ந் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. தேர்வு தள்ளிப்போகும் என்ற வதந்திகளை விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி அனில் மேஷ்ராம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு என்று அழைக்கப்படும் குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் 104 மையங்களில் ஜுலை மாதம் 30 ந்தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. அதன்படி, ஜுலை 30 ந்தேதி அன்று திட்டமிட்டபடி, குரூப் 2 தேர்வு நடைபெறும். இதுதொடர்பாக ஒருசில ஊடகங்களில் வரும் தவறான செய்திகளை விண்ணப்பதாரர்கள் நம்ப வேண்டாம் என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அனில்மேஷ்ராம் கூறி உள்ளார்.
Labels:
குரூப்,
டி.என்.பி.எஸ்.சி.,
தேர்வு:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment