Thursday, June 30, 2011

தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்



தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

அரசு கேபிள் டிவியைத் துவக்கும் முன், தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்கிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.


இது தொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


அரசு கட்டுப்பாட்டில் எம்.எஸ்.ஓ.க்கள் இயங்கினால் அரசு கேபிள் டிவிக்குப் போட்டியாக தனியார் கேபிள் நிறுவனங்கள் செயல்படும். அப்போது கட்டண சேனல்களை தன் வசம் வைத்துள்ள தனியார் கேபிள் நிறுவனங்கள், அந்தச் சேனல்களை அரசுக்கு கேபிள் டிவிக்குத் தர தயாராக இருக்க மாட்டார்கள்.


இதனால் அரசு கேபிள் நிறுவனத்திற்கு நஷ்டமாவதோடு தேவையற்ற தொழில் போட்டிகள் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.


எனவே, தமிழக அரசு உடனடியாக தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடைமையாக்கி, அதன் பின்னர் அரசு கேபிள் நிறுவனத்தையும் இயக்கிட வேண்டுகிறோம். இதன் மூலம் பொதுமக்களும் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவியைப் பார்க்க இயலும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment