Tuesday, June 28, 2011
ஜல்லிக்கட்டுக்கு எதிராக நூதன போராட்டம்
பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆயிரம் பீடி சுற்றினால் 114 ரூபாய் கூலி வழங்க வேண்டும், நிலுவைத்தொகையை உடனே வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (28-ந்தேதி) வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நெல்லை மாவட்ட தமிழ்நாடு பீடித்தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்தது.
அதற்கு மற்ற கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமான பீடித்தொழிலாளர்கள் உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் பீடித்தொழிலாளர்கள் அனைவரும் பீடி இலைகள் வாங்க, கட்டிய பீடிகளை கொடுக்க கம்பெனிகளுக்கு செல்லவில்லை.
நெல்லை மாவட்ட ஜனநாயக பீடித்தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ராமையா, வெங்கட்ராமன், செல்வி, ஜெயக்கொடி, மாரியம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Labels:
எதிராக,
போராட்டம்,
ஜல்லிக்கட்டுக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment