Friday, July 1, 2011
ராம்தேவ், அண்ணா ஹசாரேவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ராம்தேவ், அண்ணா ஹசாரேவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
பாபா ராம்தேவ், அண்ணா ஹசாரே உள்ளிட்டோரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் எம்பி விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபா ராம்தேவ், அண்ணா ஹசாரே ஆகியோரின் மக்கள் விரோத செயல்களை கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப் பேரவை உறுப்பினர், பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றியம் என எந்த அமைப்பிலும் பதவியில் இல்லாத இந்த 2 பேரிடமும் அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதனையும் மீறி இந்திய ஜனநாயக மரபுகளை குழித்தோண்டி புதைக்கும் வகையில் அரசை அச்சுறுத்தும் இவர்களின் செய்லகளை கண்டிப்பதாக கூட்டத்தில் பேசியவர்கள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment