Saturday, July 2, 2011
வண்டலூர் பூங்காவில் சிங்கம் 3 குட்டி போட்டது
வண்டலூர் பூங்காவில் சிங்கம் 3 குட்டி போட்டது
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கம் அழகான 3 குட்டிகளை போட்டது. இது அந்த சிங்கத்திற்கு 3-வது பிரசவம் ஆகும். சிங்கமும், குட்டிகளும் தனி அறையில் வைத்து கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இவற்றை நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர்.
இந்த பூங்காவில் உள்ள லயன் சபாரியில் கவிதா என்ற 9 வயது பெண் சிங்கம் உள்ளது. கவிதா சிங்கம் கடந்த 2008-ம் ஆண்டில் 3 குட்டிகளையும், 2010-ம் ஆண்டில் 2 குட்டிகளையும் போட்டது. இதில் ஒரு குட்டி மட்டும் இறந்து விட்டது. மற்றவை நன்றாக உலவி வருகின்றன.
இந்நிலையில் லயன் சபாரியில் உள்ள ராகுல் என்ற ஆண் சிங்கத்துடன் கவிதா இணைந்ததால் மீண்டும் கர்ப்பம் தரித்தது. கடந்த 30-ந் தேதி அதிகாலை அது 3 அழகான குட்டிகளை ஈன்றது.
தற்போது புதிதாக பிறந்துள்ள இக்குட்டிகளையும் சேர்த்து பூங்காவில் 12 ஆண், 9 பெண் மற்றும் 3 குட்டிகள் என சிங்கங்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
கவிதா சிங்கமும், புதிதாக பிறந்த குட்டிகளும் லயன் சபாரியில் உள்ள மற்ற சிங்கங்களால் இடைïறு ஏற்படாமல் இருக்க விலங்கு கூடத்தில் தனியறையில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. இந்த தனியறையைச் சுற்றி பாதுகாப்பிற்காக நிழல் வலைகள் கட்டப்பட்டு குகை போன்ற இருண்டான, பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
மேலும் இவற்றின் நடவடிக்கைகளை கவனித்து தேவைப்படும் மருத்துவ வசதிகள் அளிக்க ஏற்றவாறு ஒரு கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமிரா மூலம் குட்டிகளை, தாய் சிங்கம் எவ்வாறு பாதுகாக்கிறது என்பதையும் கண்காணிக்கிறார்கள்.
தற்போது குட்டி ஈன்றுள்ள பெண் சிங்கத்திற்கு 7 கிலோ மாட்டு இறைச்சியும், 150 கிராம் ஈரலும் கூடுதல் சிறப்பு உணவாக 2 கிலோ கோழி இறைச்சியும் தினமும் வழங்கப்படுகிறது.
இந்த தகவல்கள் பூங்கா இயக்குனர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Labels:
குட்டி,
சிங்கம்,
பூங்காவில்,
போட்டது,
வண்டலூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment