Saturday, July 2, 2011

பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள்


பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள்
 
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வருவாய் கோட்டாட்சியர் கே.பிரியாவிடம் நிலத்தடி நீர் பாதிப்பால் பயிர் பால் பிடிக்காமல் கருகிவிட்டது.
 
நெல், கரும்பு, மணிலா கருகி மகசூல் இழப்பு ஏற்பட்டு உள்ளது.ஆகையால் காப்பீடு செய்த விவசாயிகள் நலன் கருதி சாகுபடி அடங்களில் எழுதி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
 
தொடர்ந்து தாலுகா அலுவகம் முன்பு பாதிக்கபட்ட நெல் பயிரை வைத்து அதற்கு மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment