Sunday, July 3, 2011
என்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கு 81 பேர் வரவில்லை
என்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கு 81 பேர் வரவில்லை
தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கவுன்சிலிங் சென்னை அண்ணாபல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக பிளஸ்-2 படிப்பில் தொழில்கல்வி படித்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது.
நேற்று 691 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 81 பேர் வரவில்லை. வந்தும் 10 பேர் இடத்தை தேர்வு செய்யாமல் சென்றனர். இவர்கள் வேறு படிப்புக்கு சென்றிருக்கலாம்.நேற்று 604 பேர் இடங்களை தேர்ந்து எடுத்தனர்.
இதுவரை நடந்த 3 நாள் தொழில்கல்வி கவுன்சிலிங்கில் 1,709 பேர் அழைக்கப்பட்டதில் 140 பேர் வரவில்லை. 1,559 பேர் கல்லூரிகளையும், பிரிவையும் தேர்ந்து எடுத்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் 7-ந்தேதி நடக்கிறது. 8-ந்தேதி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் பொதுகவுன்சிலிங் தொடங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment