Sunday, July 3, 2011

வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கைது



வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கைது

பெங்களூர் விவேக்நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஈஜிபுரா 5 வது கிராசில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வீட்டில் புகுந்து போலீசார் சோதனை நடத்தியதில், அங்கு விபசாரம் நடந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 5 புரோக்கர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.


அதில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த அஞ்சுசிங்(வயது 55), முஸ்கான்ராய்(28), கிருஷ்ணா(27), தேவகன்ராய்(20), விவேக் நகரை சேர்ந்த ராகேஷ்(37) என்று தெரியவந்தது. மேலும் அந்த வீட்டில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த பிரியா தத்தா(20), சீமா(35), சமீதா(21), தர்ஷாராய்(24), மாயா(18), ஜெசிகா(21), சுபா(26), அஞ்சலி காமி(21), ப்ரனித்தா(30) ஆகிய 9 பெண்களும் இருந்தனர்.


இந்த 9 பேரையும் கைதான புரோக்கர்கள் பெங்களூரில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறி மேற்கு வங்காளத்தில் இருந்து அழைத்து வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் பார்களில் நடனம் ஆட வைத்தும், வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தியும் வந்ததும் தெரியவந்தது.


இந்த இளம்பெண்களுடன் வாடிக்கையாளர்கள் உல்லாசமாக இருப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வாங்கி பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இதையடுத்து, அந்த பெண்கள் 9 பேரையும் அவர்களது சொந்த ஊருக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கைதான 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment