Sunday, July 3, 2011
யானையை கொன்று தந்தங்கள் திருட்டு
யானையை கொன்று தந்தங்கள் திருட்டு
நீலகிரி வடக்கு வனக் கோட்டத்தில் ஒரு கும்பல் யானையை கொன்று தந்தங்களை திருடி சென்றுள்ளது.
நீலகிரி வடக்கு வனக்கோட்டத்துக்குட்பட்ட தெங்குமரஹாடா துலுக்கன் பட்டி என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது 12 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் யானை இறந்து கிடந்தது. அதன் தந்தங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருந்தன. இதனால் அந்த யானை தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
யானையை கொன்று திருடப்பட்ட தந்தங்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கலாம் என தெரிகிறது. மேலும் யானை இறந்து கிடந்த இடத்தின் அருகே வேட்டை கும்பல் சமையல் செய்து சாப்பிட்டதற்கான அறிகுறிகள் இருந்தன. இந்த செயலில் ஈடுபட்டது கர்நாடகாவை சேர்ந்த கும்பலா? அல்லது தமிழ் நாட்டை சேர்ந்த கும்பலா? என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே தெங்குமரஹாடா வனப்பகுதியில் 2 யானைகள் இறந்து, அழுகிய நிலையில் கிடந்தன. இதில் ஒரு யானை ஆண் என்றும், அதன் தந்தங்கள் திருடப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதனிடையே மீண்டும் யானை வேட்டையாடப்பட்ட சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment