சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது
கொலை மிரட்டல் வழக்கு; கைது - விசாரணை

நடிகர் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தயாரிப்பாளர் செல்வராஜ், தன்னிடம் 90 லட்சம் மோசடி செய்து விட்டார் என்று சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மீது புகார் செய்திருந்தார்.
மேலும் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஏமாற்றுதல், மோசடி, மிரட்டல், கொலை மிரட்டல் ஆகிய 4 பிரிவுகளில் சக்சேனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவிடம் கடந்த 2 நாட்களூக்கு முன்பு சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார் சக்சேனா. அப்போது விமான நிலையத்திலேயே சக்சேனா கைது செய்யப்பட்டார்.
அசோக்நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சக்சேனாவிடம் விசாரணை நடைபெற்றது.
சைதாப்பேட்டை 9வது நீதிமன்ற நீதிபதி வீட்டில் சக்சேனா ஆஜர்படுத்தப்பட்டார்.
No comments:
Post a Comment